லக்னோ, நவ. 12– உத்தரபிரதேசத்தில் வீடு கட்டும் போது மண்சரிவு ஏற்பட்டு 4 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசம் காஸ்கஞ்ச் பகுதியில், வீடு கட்டும் பணி நடந்து வந்தது. அங்கு பணிபுரிந்த பெண்கள் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது பெரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பெண்கள் பலத்த காயமுற்றனர். அவர்களை மீட்ட மீட்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜே.பி.சி. இயந்திரம் […]