செய்திகள்

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், ஜன. 2– ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மற்றும் அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவருடன் மகள் அனீஸ் பாத்திமா (40), மருமகன் சகுபர் சாதிக் (47), ஹர்ஷத் […]

Loading

செய்திகள்

மின்கம்பியில் உரசிய பஸ்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளம்பெண்

ஆற்காடு, டிச. 21- டீ குடிப்பதற்காக பஸ்சை சாலையோரம் நிறுத்திய போது மின்கம்பத்தில் உரசியதால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பஸ்சில் சென்றுள்ளனர். அப்போது பஸ் ஆற்காடு அருகே சென்று கொண்டிருந்த போது வழியில் இருந்த டீ கடையில் நிறுத்தி உள்ளனர். அப்போது சாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக்கம்பி பஸ்சின் மேல் தலத்தில் உரசியதாக தெரிகிறது. இதன் காரணமாக பஸ் முழுவதும் மின்சாரம் […]

Loading

செய்திகள்

கவரைப்பேட்டை ரெயில் விபத்து: கவனக்குறைவாக ரெயிலை ஓட்டியதாக மேலும் 4 பிரிவுகளில் வழக்கு

சென்னை, நவ.5- கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக கவனக்குறைவாக ரெயிலை இயக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த மாதம் 11-–ந் தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. மெயின் வழியில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் வழியில் சென்றதே இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் […]

Loading

செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பலி

மாட்ரிட், நவ. 1– ஸ்பெயின் நாட்டில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின. மேலும் இடி, மின்னலுடன் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]

Loading

செய்திகள்

இங்கிலாந்து பாப் பாடகர் லியாம் பெய்ன் ஓட்டல் 3-வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு

பியூனஸ் அயர்ஸ், அக். 17– இங்கிலாந்து பாப் பாடகர் லியாம் பெய்ன் ஓட்டல் ஒன்றின் 3வது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 31. ஒன் டைரக்‌ஷன் (1டி) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் பிரபலமானார். கடந்த 2008 முதல் அவர் இசைத்துறையில் இருந்து வருகிறார். இங்கிலாந்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான ‘தி எக்ஸ் பேக்டர்’ மூலமாக வாய்ப்பை பெற்ற இவர், பின்னர் தனியாக […]

Loading

செய்திகள்

தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

காசா, அக். 15– தெற்கு காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானார்கள். காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது […]

Loading

செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 240 பேர் மயக்கம்; 5 பேர் உயிரிழப்பு

சென்னை, அக்.7– வெயிலின் தாக்கத்தால் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். காவல்துறை, போக்குவரத்து, ரெயில்வே துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததே மக்களின் அவதிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வந்திருந்த பொதுமக்களுக்கு குடிநீர் வசதி […]

Loading

செய்திகள்

குன்னூரில் கன மழை: மண்சரிவில் சிக்கிய ஆசிரியை உயிரிழப்பு

மலை ரெயில் சேவை இன்று ரத்து குன்னூர், செப். 30– குன்னூரில் பெய்த கன மழையால் மண் சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் […]

Loading

செய்திகள்

லெபனானில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 105 பேர் பலி

ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழப்பு பெய்ரூட், செப். 30– லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒரே வாரத்தில் நஸ்ரல்லா உள்பட 7 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் […]

Loading

செய்திகள்

பீடி புகைப்பதால் 5.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு

ஆய்வில் அதிர்ச்சி தகவல் புதுடெல்லி, செப். 9– பீடி புகைப்பதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் மற்றும் பொருளாதாரச் சுமைகள் குறித்து ஜோத்பூர் எய்ம்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் கடந்தாண்டு மட்டும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான ஆய்வில், பீடி புகைப்பதால் சத்தீஸ்கரில் கடந்த 2023 ஆம் ஆண்டு 11,011 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மாநிலத்தில் 4.1 சதவீத மக்கள் பீடி புகைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாநிலங்களிலும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக […]

Loading