செய்திகள்

பொதுமக்கள் புகார் மனு மீது உடனடி நடவடிக்கை: கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை, மே 15– சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 31 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் துறை கமிஷனர் ஆ.அருண் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்தியாவின் பதிலடி வலிமையாக இருக்க வேண்டும்

முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு புதுடெல்லி, மே.12- பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்தியாவின் பதிலடி மிகவும் வலிமைவாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று முப்படைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ நீடிக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா-?பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் கொடிய சிறைச்சாலை மீண்டும் திறப்பு !

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு நியூயார்க், மே 6– கலிபோர்னியா மாகாணத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட, கொடிய அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ் சிறை. இந்த சிறைச்சாலை 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறு தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது. சான் […]

Loading

செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து:

நிதியுதவி: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு சென்னை, ஏப்.27-– பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (26–ந் தேதி) காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி மாரியம்மாள் […]

Loading

செய்திகள்

வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, ஏப்.18- வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர்களை நியமிக்க தடை விதித்த நீதிபதிகள், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததால் அது சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், தி.மு.க. விடுதலைச்சிறுத்தைகள், த.வெ.க, […]

Loading

செய்திகள்

முதல்வரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்:

விழுப்புரம், ஏப்.17- முதல்-அமைச்சரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி […]

Loading

செய்திகள்

தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஏப். 16– தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சில சுற்றறிக்கைகள் தமிழ் அல்லாமல் ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டு வந்தன. இதனிடையே, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, தமிழ் மொழிக்கு அரசுத் துறைகளில் முக்கியத்துவம் அளிப்பதை […]

Loading

செய்திகள்

சிவகாசியில் மின்சாரம் தாக்கி பலியான கணவன் –மனைவி – பாட்டி குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஏப்.15– விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காரிசேரி கிராமம், வடக்குத்தெருவில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் பொங்கல் மறுபூஜைக்காக நேற்று (14–ந் தேதி) மாலை சுமார் 3.10 மணியளவில் ரேடியோ அமைக்கும் பணியின்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் வயரின் […]

Loading

செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading

செய்திகள்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதிபதியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி, நவ. 29– முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2001 – 2006ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி, மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் […]

Loading