செய்திகள்

வக்ப் சட்டத் திருத்தம்: எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி, ஏப். 16– வக்ப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வக்ப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதை அடுத்து வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்ப் சட்டத் திருத்த மசோதா […]

Loading

செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்டம் குறித்து 10 க்கும் மேற்பட்ட வழக்குகள்

ஒன்றிய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல் டெல்லி, ஏப். 9– வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கும் முன்பு, தனது தரப்பைக் கேட்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் […]

Loading

செய்திகள்

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட இட ஒதுக்கீடு கூடாது : உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பரபரப்பு

டெல்லி, ஜன. 30– முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், மாநில ஒதுக்கீட்டுக்கு இந்த தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா தலைநகரான சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில், வசிப்பிட அடிப்படையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை […]

Loading

செய்திகள்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதிபதியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி, நவ. 29– முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2001 – 2006ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி, மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனிக் கழிப்பறை

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் டெல்லி, நவ. 12– நாட்டிலேயே அதிக அளவாக, தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும் கேரளாவில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாணவிகளுக்கு தனிக்கழிப்பறைகள் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி […]

Loading

செய்திகள்

குழந்தை திருமண தடைச்சட்டத்திற்கு தனிநபர் சட்டங்கள் தடை கிடையாது

வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த உச்சநீதிமன்றம் சென்னை, அக். 19– குழந்தை திருமண தடை சட்டத்தின் செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை திருமண தடை சட்டத்தின் செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்கமுடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், குழந்தை திருமண சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. தனிநபர் சட்டங்களை காட்டி நடத்தப்படும் குழந்தை திருமணங்கள், தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமையை அந்த சிறாருக்கு மறுப்பதாக கூறப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி அடுத்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் தலைமை நீதிபதி தகவல்

டெல்லி, செப். 20 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்படுவதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த 1947 ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறியதாவது:– தமிழில் மொழிபெயர்ப்பு ‘அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது […]

Loading

செய்திகள்

முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயார்: பொதுமக்களிடம் மம்தா ஆவேசம்

கொல்கத்தா, செப். 13– முதலமைச்சர் பதவியை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று பொதுமக்களிடம் பேசிய மம்தா ஆவேசமாக கூறினார். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் 8 ந்தேதி பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சஞ்சய் ராய் என்பவர் கைது […]

Loading

செய்திகள்

அமைச்சர்கள் மீது வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திடீர் தடை

சென்னை, செப். 6– சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்கிலிருந்து […]

Loading