செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து ஜெலன்ஸ்கி வீடியோ

கீவ், மார்ச் 3– அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றி உணர்வு” என்று குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்த போரில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்குக் கொடுத்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோரை […]

Loading

செய்திகள்

உக்ரைனில் அமைதி நிலவ பதவியை விட்டுக் கொடுக்க தயார்: அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

கீவ், பிப். 24– உக்ரைனில் அமைதி நிலவ என் பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். கடந்த, 2022 பிப்ரவரி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது. இந்தப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. தற்போது போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. இதற்கிடையே, ‘உக்ரைன் அதிபர் […]

Loading

செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த விரைவில் டிரம்ப் – புதின் சந்திப்பு

நியூயார்க், பிப். 20– உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் நேருக்கு நேர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக நாடுகள் பிரச்சினைகளில் தலையீடு செய்து அவற்றை முடித்து வைத்து வருகிறார். சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்ற இஸ்ரேல்- ஹமாஸ் போர் டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு ஒப்பந்த முறையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் அமைதியை […]

Loading

செய்திகள்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை

2024 ஆண்டின் நிறைவுரையில் ரஷ்ய அதிபர் புதின் உறுதி மாஸ்கோ, டிச.20– 2024 ஆண்டின் நிறைவு உரை ஆற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்ட் டிரம்ப்புடன் விரைவில் பேச உள்ளதாக கூறியது உலக நாடுகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் இடையே மோதல் போக்கு தொடங்கி போராக வெடித்தது. நேட்டோ என்ற அமெரிக்க ஆதரவு உலக நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் சேர […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுத சப்ளை: பிரிட்டன் மீது சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா ஆயத்தம்?

மாஸ்கோ, நவ. 25– ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவி வரும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யா சைபர் போர் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நேட்டோ விவகாரத்தில் 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுவிட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய ஆயுதங்களை சப்ளை செய்து வருகின்றனர். மேலும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஊக்கப்படுத்துகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி எங்களுக்கு எதிராக தாக்குதல்: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ, நவ. 22– உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க மற்றும் பிரிட்டனை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான மோதல் 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. நேட்டோ அமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முயன்றதால், அதனை எதிர்த்த ரஷ்யா, உக்ரைனுக்கு பலமுறை எச்சரிக்கை செய்தது. ஏனெனில், அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டே அமைப்பில் உக்ரைன் இணைந்தால், அண்டை நாடான உக்ரைனில் அமெரிக்க உள்ளிட்ட நேட்டே […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை ரூ.560 உயர்வு: சவரன் ரூ.57,000 ஐ நெருங்கியது

சென்னை, அக். 11– சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,960 க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 4 ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய […]

Loading

செய்திகள்

ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணை வீசினால் உக்ரைன் மீது அணுகுண்டு வீசுவோம்

அதிபர் புதின் கடும் எச்சரிக்கை மாஸ்கோ, செப். 26– ரஷ்யாவின் உள் நகரங்களின் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசினால், உக்ரைன் மீது அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் முடிவை ரஷ்யா பரிசீலிக்கும் என்று அதிபர் புதின் எச்சரித்துள்ளார். 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா–உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் சேர முயன்ற […]

Loading

செய்திகள்

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

நியூயார்க், செப்.24– பிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். அப்போது உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கும் இந்தியாவின் ஆதரவினை மீண்டும் உறுதிபடுத்தினார். இதுகுறித்து ஜெலான்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பிரதமர் மோடி எழுதியுள்ள பதிவில், “நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். இரண்டு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் நான் உக்ரைன் சென்றபோது எடுத்த முடிவுகளை […]

Loading

செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் மூலம் உக்ரைனுக்கு வெடி பொருட்கள் அனுப்பப்படுகிறதா?

இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு லண்டன், செப். 20– ஐரோப்பிய நாடுகள் மூலம் உக்ரைனுக்கு வெடிபொருட்கள் அனுப்பப்படுவதாக கூறப்படுவது தவறு என்றும், ராணுவம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது சர்வதேச கடமைகளை பின்பற்றும் என்றும் இந்திய அரசு தரப்பில் விளக்கமளித்துள்ளது. இந்திய ஆயுதத் தயாரிப்பாளர்களால் விற்கப்படும் வெடிமருந்துகள், ஐரோப்பிய வாடிக்கையாளர்களால் உக்ரைனுக்கு திருப்பி விடப்படுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பரிமாற்றம் ஓராண்டுக்கு மேல் நிகழ்ந்துள்ளது என்றும் […]

Loading