செய்திகள்

சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி: இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தகவல்

கன்னியாகுமரி, மார்ச்.18- சந்திரயான்-–5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நிகழ்ச்சி யொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்–5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து சில நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்–5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-–3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் எந்தவித சேதாரமும் […]

Loading

செய்திகள்

29 ந்தேதி ஜிஎஸ்எல்வி எப்15 ராக்கெட்: விண்ணில் செலுத்த தயார்– இஸ்ரோ

சிறீகரிகோட்டா, ஜன.27– ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் 29 ந்தேதி, தனது 100 வது செயற்கைகோளை விண்ணில் செலுத்த தயாராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கை கோள்களுடன் 29 […]

Loading

செய்திகள்

பழவேற்காடு மீனவர்கள் 29ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சென்னை, ஜன. 25– ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட உள்ளதால் வரும் 29ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள […]

Loading

செய்திகள்

ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, ஜன.24-– ‘ஜி.எஸ்.எல்.வி. எப்.-15 ராக்கெட் என்.வி.எஸ்.-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோளை சுமந்தபடி வருகிற 29–-ந்தேதி புதன்கிழமை விண்ணில் பாய்கிறது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2–-ம் தலைமுறைக்கான என்.வி.எஸ்.02 என்ற வழிசெலுத்தல் செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகளாகும். இதனை விண்ணில் ஏவுவதற்காக ஜி.எஸ்.எல்.வி- எப்-15 ராக்கெட்டை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இது ஆந்திரமாநிலம், திருப்பதி மாவட்டத்தில் […]

Loading

செய்திகள்

விண்வெளியில் காராமணி பயிர்கள்: புகைப்படம் வெளியிட்ட இஸ்ரோ

டெல்லி, ஜன. 05– விண்வெளியில் தாவரம் வளர்ப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள இஸ்ரோ, செயற்கைக்கோள்களுடன் சேர்த்து காராமணி விதைகளையும் விண்ணுக்கு அனுப்பி, அது முளைத்துள்ளதை வெளியிட்டுள்ளது. விண்வெளியில் தனக்கென தனி ஆய்வு மையத்தை நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்பேஸ் டாக்கிங் திட்டத்தில் 2 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது. ராக்கெட்டில் இருந்து இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பிரிந்தன. அவை பூமியை சுற்றிவரும் நிலையில், இரண்டுக்குமான தொலைவு தற்போது இரண்டு கிலோ மீட்டராகக் […]

Loading

செய்திகள்

செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் செயற்கைக்கோள்; நவம்பர் 29–ல்

இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது புதுடெல்லி, அக். 21– செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்கும் ‘புரோபா-3’ செயற்கைக்கோள் வரும் நவம்பர் 29ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, விண்வெளியில் செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்க, ‘புரோபா-3’ என்ற இரட்டை செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. விண்ணில் இருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் வகையில் இந்த இரட்டை செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, ‘புரோபா-3’ செயற்கைக்கோள் இறுதிக்கட்ட […]

Loading

செய்திகள்

விண்வெளியில் ஆய்வு மையம், சாதிக்க தயாராகும் இஸ்ரோ

தலையங்கம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அடைய உள்ளது. 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த “பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்” எனப்படும் விண்வெளி மையத்தை நிலைப்படுத்தும் திட்டத்திற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த விண்வெளி மையம், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல் அம்சமாக பார்க்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டில் இதன் முதல் பாகம் விண்ணில் செலுத்தப்படும் என்றும், 2035க்குள் முழுமையாக செயல்படத் துவங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த 19 கருவிகளுடன் விண்கலத்தை அனுப்ப ‘இஸ்ரோ’ திட்டம்

சென்னை, அக்.8- முதல் முறையாக வெள்ளி கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், அங்குள்ள எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் விண்கலம் ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து 2-வதாக அமைந்துள்ள கோள் வெள்ளி (வீனஸ்). இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக […]

Loading