செய்திகள்

போர் நிறுத்த நேரத்திலும் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு உரிமை உண்டு:பகீர் கிளப்பியுள்ள பிரதமர் நெதன்யாகு

டெல் அவிவ், ஜன. 19– இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வருகிறது. இதனால் […]

Loading

செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: 2 லட்சம் பேர் மாயம்

டமாஸ்கஸ், டிச. 13– சிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில் இதுவரை 2 லட்சம் காணாமல் போயுள்ளதாகவும், ஒரு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு, அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேல் , ஹெஸ்பொலா இடையே சமரசம்: பைடன் திட்டம் என்ன?

தலையங்கம் இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலா இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல்கள் நிறைவடைந்ததாக சில சமயங்களில் அறிவிக்கப்பட்டாலும் கடந்த காலத்தில் இந்த முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல்-லெபனான் போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம்– 1701 நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் மூலம் லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் ஆயுத குழுக்களை தடை செய்யவும், அப்பகுதியில் அமைதி காக்குமிடம் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இரு தரப்பினரும் இந்தத் […]

Loading

செய்திகள்

கடந்த 14 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்

அமெரிக்க அதிபர் பிடன் அறிவிப்பு ஒப்பந்தத்தை மீறினால் தாக்குதல் – நெதன்யாகு எச்சரிக்கை ஜெருசலேம், நவ. 27– கடந்த 14 மாதங்களாக இஸ்ரேல் – லெபனான் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் […]

Loading

செய்திகள்

பாலஸ்தீனியர்கள் படுகொலை: இஸ்ரேல் பிரதமருக்கு பிடிவாரண்ட்

சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஹேக், நவ. 22– இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாராண்டு பிறப்பித்து உள்ளது. பாலஸ்தீனத்தை ஆக்ரமித்துள்ள இஸ்ரேலுக்குள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் என்ற பாலஸ்தீன அமைப்பு நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணயகைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களை மீட்கவும், ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்கவும் இஸ்ரேல் ஆயுதங்களை கையில் எடுத்தது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஈரான் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க், அக். 26 ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் ஓராண்டு கால போரில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு விருந்தினராக வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவரை, ஈரான் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொலை செய்தது. இதனைத் தொடர்ந்து, ஈரான் நாடும் […]

Loading

செய்திகள்

ஈரானைத் தொடர்ந்து சிரியா, ஈராக் மீதும் இஸ்ரேல் தாக்குதல்

டெல்அவிவ், அக். 26– ஈரானை தாக்கியதுடன் சிரியா மற்றும் ஈராக்கையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்கியுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இந்தப் போரை தொடங்கியது. இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். பஞ்சம், நோயினால் மறுபக்கம் உயிர் சேதம் நிகழ்கிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பையும் எதிர்த்து இஸ்ரேல், லெபனான் மற்றும் ஈரான் மீது தாக்குதல் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஹமாஸ் தலைவர் வதம், இஸ்ரேல் கோபம் தீர்ந்ததா?

தலையங்கம் இஸ்ரேல் அறிவித்துள்ளதன்படி, அக்டோபர் 7 இல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை அவர்கள் கொன்றுவிட்டதாக அறிவித்தனர். இஸ்ரேல் போரின் தொடக்கத்தில் தலைமறைவான சின்வாரை இலக்காகக் கொண்டு நடத்திய 10 மாத நீண்ட தேடல் வேட்டை இப்போது முடிவடைந்துள்ளது. இதனால் இனி பாலஸ்தீன மக்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஹமாஸின் ராணுவத் தலைவராக இருந்த சின்வார், கடந்த ஆண்டில் பெரும்பாலான நேரத்தை காஸாவின் அடிப்பகுதியில் […]

Loading

செய்திகள்

தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

காசா, அக். 15– தெற்கு காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானார்கள். காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை ரூ.560 உயர்வு: சவரன் ரூ.57,000 ஐ நெருங்கியது

சென்னை, அக். 11– சென்னையில் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,960 க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் தேவை அதிகரிப்பு, ரஷ்யா- உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கணிசமாக ஏற்றம் கண்டிருக்கிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை, கடந்த 4 ந்தேதி புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 56,960 க்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய […]

Loading