நாகை, டிச. 21– நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்து வலை உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், கோடியக்கரையில் ஏராளமான மீனவர்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். அந்தவகையில் அக்கரைப்பேட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு மூலம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த கண்ணன் […]