செய்திகள்

இலங்கை கடற்படை பறிமுதல் செய்த விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.8 லட்சமாக உயர்வு

சென்னை, மார்ச்.4-– இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.8 லட்சமாக உயர்த்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் நிகழ்வு குறித்தும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் குறித்தும், இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காணவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் மீட்டுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும், […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம், பிப். 23– ரமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள 13 மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கடிதம்

பாண்டிச்சேரி, ஜன 28 காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்திருக்கும் படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும், வெளி விவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் புதுவை முதல்வர் என் ரங்கசாமி கடிதம் எழுதி இருக்கிறார். இதே போல எம்.பியான பி. வைத்தியலிங்கமும் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். கடற்படையினரின் தாக்குதலில் காரைக்காலைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன.13-– இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர் களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது

சென்னை, டிச. 3– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த […]

Loading

செய்திகள்

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள்: இலங்கை கடற்படை பயன்படுத்த அரசு உத்தரவு

கொழும்பு, நவ. 20– தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன்னதாக பறிமுதல் செய்யப்படும் படகுகளை மீண்டும் […]

Loading

செய்திகள்

தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

நாகை, நவ. 12– நேற்று முன்தினம் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் 35 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை […]

Loading