நெடுந்தூரப் பயணம் என்றாலும் பக்கத்தில் செல்வதென்றாலும் யாருக்கும் லிப்ட் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையுடையவன் சென்றாயன். “கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்ததால் நகரம் படுத்தும் பாடு அவனை என்னென்னவோ செய்தது .அத்தனையும் பொய், பிராடு. பித்தலாட்டம், இவைகள் தான் நகரத்தில் மலிந்து கிடக்கின்றன” என்று நகரத்திற்கு வந்த உடனே அறிந்து கொண்டான். அதனால் அவன் யாரையும் நம்புவதில்லை. நண்பர்களாகவும் ஏற்றுக் கொள்வதில்லை. எல்லாம் முன்னாடி விட்டுப் பின்னாடி பேசும் புறம் பேசும் புல்லர்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. அதனால் […]
![]()


