செய்திகள்

கவிஞர் வைரமுத்து தாயார் மரணம்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் சென்னை, மே 11–- தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள், தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–- கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் மறைந்ததை அறிந்து வேதனை அடைந்தேன். தமிழையும், அன்பையும் ஊட்டி […]

Loading

செய்திகள்

எம்.எல்.ஏ. தளபதியின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஏப் 17– மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதியின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘‘மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மதுரை மாநகர் தி.மு.க. செயலாளருமான கோ.தளபதியின் தாயார் மாரியம்மாள் முதுமை காரணமாக மறைவெய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன். ஆளாக்கி வளர்த்த அன்பு அன்னையை இழந்து வாடும் தளபதிக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’. இவ்வாறு […]

Loading

செய்திகள்

முன்னாள் எம்.எல்ஏ கந்தசாமி மறைவு : ஸ்டாலின் இரங்கல்

சென்னை, ஏப் 16– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கந்தசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– ‘‘குளித்தலை சட்டமன்றத்தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கந்தசாமி நேற்று முன்தினம் (14–ந் தேதி) மறைந்தார் என்று அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கந்தசாமி அண்ணா தலைமையில் தி.மு.க. முதன்முதலாக ஆட்சியைப் பிடித்து இந்திய அரசியல் களத்தில் மிகப்பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட 1967-–ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், கலைஞர் தலைமையில் எதிர்கொண்டு வரலாறு காணாத […]

Loading

செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை, ஏப்.14-– முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் காலமானார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-– அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி முன்னாள் செயலாளரும், ஆரணி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் உடல்நல குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் மீது விசுவாசம் கொண்டிருந்த ஜெய்சன் ஜேக்கபை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து […]

Loading

செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை, மார்ச் 26– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தன் செய்தியில் கூறியிருப்பதாவது:– முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் 1977–ல் ஆலங்குளம், 1980–ல் பாளையங்கோட்டை, 2006-–ல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார். நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

எழுத்தாளர் நாறும்பூநாதன் மரணம்: முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

திருநெல்வேலி, மார்ச் 17– தமிழக அரசின் உ.வே.சா., விருது பெற்ற எழுத்தாளர் நாறும்பூநாதன் (வயது 66) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் பிறந்து கோவில்பட்டி ஜி.வி.என். கல்லுாரியில் பயின்றவர் நாறும்பூநாதன். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள், வலைத்தள பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். ”கனவில் உதிர்ந்த பூ” எனும் அவரது நுால் கல்லுாரி ஒன்றில் பாடமாக […]

Loading

செய்திகள்

இந்தியாவின் அணு விஞ்ஞானி ஆர்.சிதம்பரம் காலமானார்

புதுடெல்லி, ஜன.4– இந்தியாவின் மூத்த அணு விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரம் இன்று காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக்குறைவு காரணமாக, மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று அதிகாலை 3.20 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவரது இணையற்ற பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று அணுசக்தி துறை அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. சிறந்த இயற்பியலாளரும் இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் […]

Loading

செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் காலமானார் : ஜோ பிடன், டிரம்ப் இரங்கல்

வாஷிங்டன், டிச. 30– அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தனது 100வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அமெரிக்காவின் 39வது அதிபரான இவர் கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜார்ஜியாவில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அமெரிக்காவின் 39வது அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவர் 1977 முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தார். விவசாய […]

Loading

செய்திகள்

மன்மோகன் சிங் மறைவு: இந்தியா ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டது

புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் சென்னை, டிச. 28– முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று முன்தினம் […]

Loading

செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஈரோடு தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல்

சென்னை, டிச.20- ஈரோட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், ‘ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் பேரிழப்பாகும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேசிய இயக்கத்தில் இருந்தாலும், தந்தை பெரியார் வழியில் பகுத்தறிவு–சுயமரியாதை கொள்கை உணர்வுமிக்கவராகவும், உள்ளத்தின் எண்ணங்களை ஒளிவுமறைவின்றி உரைக்கக்கூடியவராகவும், […]

Loading