செய்திகள்

இந்தியில் மாற்றப்பட்ட எல்ஐசி இணையதள பக்கம்: மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற்றம்

சென்னை, நவ. 19– இந்தியில் திடீரென்று மாற்றப்பட்ட எல்ஐசி இணையதளப் பக்கம், தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு பயந்து மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்று காலையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. சர்ச்சை செயல் இந்தி மொழியில் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், […]

Loading

செய்திகள்

அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமை ஆற்றுங்கள்: கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை, அக்.19- பிளவுவாத சக்திகளிடம் இருந்து விலகி அரசியல் சட்ட நெறிமுறைகளின் படி கடமை ஆற்றுங்கள் என்று தமிழக கவர்னருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார். தமிழக கவர்னரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்கு பதில் அளித்துள்ள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இந்தி அடுத்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் தலைமை நீதிபதி தகவல்

டெல்லி, செப். 20 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்படுவதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரமடைந்த 1947 ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்றம் வழங்கிய சுமார் 37,000 தீர்ப்புகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் அதிக மொழிபெயர்ப்புகள் நடந்து வருவதாகவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மேலும் கூறியதாவது:– தமிழில் மொழிபெயர்ப்பு ‘அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது […]

Loading

செய்திகள்

அனைத்து இந்திய மொழிகளுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளது

அமித்ஷா கருத்து புதுடெல்லி, செப். 14– அனைத்து இந்திய மொழிகளுடனும் இந்திக்கு பிரிக்க முடியாத உறவு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 4வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ மொழித் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து […]

Loading