செய்திகள்

3,935 பணியிடத்துக்கு குரூப்–4 தேர்வு தேதியை அறிவித்தது டி.என்.பி.எஸ்.சி

சென்னை, ஏப். 25– தமிழகத்தில் 3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறும். இன்று முதல் மே மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து வருகிறது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215, இளநிலை உதவியாளர் 1,621, தட்டச்சர் 1,099, இளநிலை […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கம்

புதுடெல்லி, ஏப். 24– பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று எக்ஸ் தள நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் புதுடெல்லி, ஏப். 24– காஷ்மீர் தாக்குதலுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி போலீசார் அகற்றினர். பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

தலையங்கம் ஏப்ரல் 22 அன்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 26 பேரின் உயிரைப் பறித்தது. இறந்தவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள். இது கொடிய பயங்கரவாதத் தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் இப்பகுதியில் நிலவும் பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2019ல் 370–வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத செயல்களில் இதுவும் […]

Loading

செய்திகள்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

புதுடில்லி, ஏப்.22– கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள, 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், வயது 88, இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் நேற்று காலமானார். […]

Loading

செய்திகள்

சுட்டெரிக்கும் கோடை

தலையங்கம் …. இந்தியாவின் பல மாநிலங்கள் தற்போது கடுமையான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜார்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த அசாதாரண வெப்பம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, மக்களின் உடல்நலம், விவசாயம் மற்றும் நீர் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். புவி வெப்பமயமாதல் […]

Loading

செய்திகள்

இந்தியா வந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார் புதுடெல்லி, ஏப்.21- அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார். துணை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இரவு விருந்து அளிக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வரிவிதிப்பு அறிவித்த பிறகு, அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மனைவி உஷா, குழந்தைகள் எவான், விவேக், மிராபெல் ஆகியோர் 4 நாட்கள் […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது

அகர்தலா, ஏப். 20– இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திரிபுராவில் அரசு ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் உளவு துறை இணைந்து அகர்தலா ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் திரிந்த பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வங்காளதேச நாட்டின் டாக்கா மற்றும் சிட்டகாங்கை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் இந்தியாவுக்குள் சட்டவிரோத […]

Loading

செய்திகள்

இந்தியாவிலே டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வாழும் மாநிலம் கேரளா

திருவனந்தபுரம், ஏப். 14– கேரளாவில் 21 லட்சம் மூத்த குடிமக்கள் ‘டிஜி கேரளா’ எனும் டிஜிட்டல் கல்வியறிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறன் பெற்றுள்ளனர். இதன்மூலம், டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வாழும் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ‘பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு, கணினி, செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் மற்றும் இணையதளப் பயன்பாட்டைப் பயன்படுத்த […]

Loading

செய்திகள்

மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் என்பதை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தக்கூடாது: ஸ்டாலின்

சென்னை, ஏப்.10– ஒன்றுபட்ட இந்தியாவிற்காக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டும் என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான கட்டுரை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. தாதார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் முக்கியமானதொரு கட்டுரையை இன்று எழுதியுள்ளார். வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே மக்கள்தொகையில் சமமின்மை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை […]

Loading