செய்திகள்

எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்கள் மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை,பிப்.2– “2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக ஈரோடு கிழக்கில் வெல்ல வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் என்பது எதிர்பாராத வகையிலும் மனதில் பெரும் சுமையுடனும் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஈவெரா திருமகன். […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 246 தபால் வாக்குகள் பதிவு

ஈரோடு, ஜன. 28– ஈரோடு கிழக்கு தொகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 246 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற இலக்குடன் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது. அதன்படி தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் முன்கூட்டியே தபால் வாக்குகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது .அதன்படி ’12 […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்: புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு, ஜன. 22– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணிஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. புறக்கணித்துவிட்டது. பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதானமாக தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு, ஜன. 21– ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ந் தேதி தொடங்கி 17ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் […]

Loading

செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை: த.வெ.க. அறிவிப்பு

சென்னை, ஜன. 17– ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதனால் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சைகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த […]

Loading

செய்திகள்

இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

புதுடெல்லி, டிச.7– ‘இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக உள்ளேன்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மம்தா பானர்ஜியை இந்திய கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வருவதால், ஏன் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா […]

Loading