செய்திகள்

விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு அமைத்த தேடல் குழு செல்லாது

கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு சென்னை, மார்ச்.12- விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தமிழக அரசு அமைத்த தேடல் குழு செல்லாது என்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள கவர்னர், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் (சென்னை) துணைவேந்தரை அடையாளம் காணுவதற்கான தேடல் குழுவை அமைத்து உள்ளார். இந்த குழுவில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்தின் விதிகள் மற்றும் 2018-ம் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்: ஆர்.என்.ரவி மீது முரசொலி கடும் விமர்சனம்

சென்னை, ஜன. 29– “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என கூறி, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடியரசு தின உரையில் “தமிழ்நாட்டின் வளர்ச்சி சரிவுப் பாதையில் செல்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, “தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் ஆளுநர்” என்கிற பெயரில் தலையங்கம் வெளியிட்டு ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. […]

Loading

செய்திகள்

கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர பிரதமருக்கு கோரிக்கை சென்னை, ஜன. 24– கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் காட்டமாக பேசினார். மேலும் தமிழகத்தின் கவர்னராக ஆர்.என்.ரவியே தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 51 பேர் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 3000 பேர் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு தான் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது: ஆளுநர் ரவி புகழாரம்

சென்னை, ஜன. 22– தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலம், அதனால் தான் வடகிழக்கு மாநில பெற்றோர்கள் பெண்களின் கல்விக்காக டெல்லியை பாதுகாப்பாக உணராமல், தமிழ்நாட்டிற்கு அனுப்புகின்றனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், தாத்ரா நாகர் ஹவேலி, மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவான தினத்தை கொண்டாடும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒருங்கிணைக்கப்பட்ட […]

Loading

செய்திகள்

பாரதத்தை தேசமாக ஏற்றுக்கொள்ளாத முதல்வரின் ஆணவம் நல்லதல்ல: கவர்னர் மாளிகை அறிக்கை

சென்னை, ஜன.13-– சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அதே நேரம் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் படிக்காமல் சென்றாலும், அவை விதிகளின்படி அவைக்குறிப்பில் அது […]

Loading

செய்திகள்

உரையை வாசிக்காமல் சட்டசபையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார்

புறக்கணிப்பு ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம் சென்னை, ஜன.6 தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 […]

Loading

செய்திகள்

மாநில பாடத்திட்ட தரம் குறைவா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

சென்னை, செப். 3– “ஒன்றிய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களிடம் பரிசோதிக்கட்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி தந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார்ப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில், மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்குச் […]

Loading