தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, ஜன.28– “தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் கண்காணித்து பாதுகாக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கடல் ஆமைகள் கடற்கரைப் பகுதிகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலம் ஆகும். இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான ஆமைகளின் இறந்த உடல்கள் கரையொதுங்குவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து நிலைமையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் […]