சென்னை, நவ. 23– எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டார். தெலுங்கு பேசும் பெண்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி எழும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான கஸ்தூரி தினமும் காலை 10.30 மணிக்கு எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இதன்படி கஸ்தூரி இன்று காலை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், […]