செய்திகள்

மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு: மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, ஏப்.21 மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மின் மீட்டரை கணக்கெடுக்க ரூ.4-ம், கிராமப்புறம், மலைப்பகுதியாக […]

Loading

செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்தம்: ஈஸ்டரையொட்டி புதின் அறிவிப்பு

மாஸ்கோ, ஏப். 20– ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், உக்ரைனும் தங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இதனை உக்ரைன் சமாளித்து வருகிறது. இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். […]

Loading

செய்திகள்

‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு : சென்னை, ஏப். 20– 2025–ம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு இணையதளம் மூலம் மே 3–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 வயது முதல் 35 வயது […]

Loading

செய்திகள்

முடிவுக்கு வரும் இஸ்ரேல் போர்?

பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க தயார்: ஹமாஸ் அறிவிப்பு காசா, ஏப்.18– காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை நிரந்தரமாக நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார். இந்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டால் அந்த நாட்டின் 59 பணயக்கைதிகளையும் விடுவிக்கிறோம் என்று ஹமாஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்; 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். […]

Loading

செய்திகள்

‘‘ஸ்டார் அகாடமி’’ தேர்வுப் போட்டிகள் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் : சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை, ஏப் 17– சென்னை மாவட்டம் “எஸ்டிஏடி (SDAT) ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” – துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு தேர்வுப் போட்டிகள் மற்றும் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– துணை முதலமைச்சர் 2024–-2025–ம் ஆண்டிற்காண மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி வெவ்வேறு விளையாட்டுகளுடன் […]

Loading

செய்திகள்

ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் 63-வது புதிய ஷோரூம் கூடுவாஞ்சேரியில் திறப்பு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

சென்னை, ஏப்.17- கூடுவாஞ்சேரியில் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் 63-வது புதிய ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனையொட்டி சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின நகைகளில் எண்ணற்ற தேர்வுகளை ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் 63-வது புதிய ஷோரூம் கூடுவாஞ்சேரியில் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. அதன்படி தங்க நகைகளுக்கு ஒரு கிராமுக்கு ரூ.250 குறைவாகவும், பழைய தங்கத்தை மாற்றும்போது […]

Loading

செய்திகள்

அதிக வரிவிதிப்பு கொள்கையை எதிர்த்து அமெரிக்காவின் போயிங் விமானங்கள் வாங்குவதை நிறுத்துவதாக சீனா அறிவிப்பு

பீஜிங், ஏப். 16– அமெரிக்காவின் அதிக வரிவிதிப்பு கொள்கைக்கு பதிலடியாக, போயிங் விமானங்களை வாங்குவதை சீனா நிறுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகின் இரு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர வரி விதித்து, வர்த்தக போரில் ஈடுப்பட்டு வருகின்றன. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவிகித வரி விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 125 சதவிகித வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. […]

Loading

செய்திகள்

பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக சீனாதான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன், ஏப். 16- பரஸ்பர வரி விதிப்பு தொடர்பாக இனி சீனாதான் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் அதற்கான முடிவு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34 சதவீத ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34 சதவீத வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் […]

Loading

செய்திகள்

ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பரஸ்பர வரியில் விலக்கு

டிரம்ப் அதிரடி அறிவிப்பு வாஷிங்டன், ஏப்.13- இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா பரஸ்பர வரி விதித்து உள்ளது. இந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஏராளமான பொருட்களுக்கு இவ்வாறு அதிக வரி விதிப்பதால் அந்தந்த நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது சில எலக்ட்ரானிக் பொருட்களுக்கு இந்த பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிப்பதாக அமெரிக்கா […]

Loading

செய்திகள்

தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு

சென்னை,ஜன. 25– தமிழக காவலர்கள் 21 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னி்ட்டு காவல்துறையில் சிறப்பாக செயல்படும் வீரதீர செயல்களுக்கான விருது, மெச்சத்தக்க சேவைக்கான விருது மற்றும் மிக சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் பல்வேறு […]

Loading