சென்னை, ஏப்.21 மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகளில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பணிக்கு ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மின் மீட்டரை கணக்கெடுக்க ரூ.4-ம், கிராமப்புறம், மலைப்பகுதியாக […]