செய்திகள்

ESI மருந்தகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் !

அமைச்சர் சி.வெ.கணேசன்அறிவுரை சென்னை, மே 14– தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமையில் சென்னை, அயனாவரம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை கூட்ட அரங்கில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டமானது காப்பீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உடல் நலக்குறைவு, மகப்பேறு, உடல் ஊனம் மற்றும் பணியிடத்தில் ஏற்படும் விபத்துக்கள் அல்லது தொழில்சார் நோய்களால் மரணம் […]

Loading

செய்திகள்

என்ஜினீயரிங், கலை– அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு

அமைச்சர் கோவி.செழியன் துவக்கினார் சென்னை, மே.8- என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2025-–26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது.இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும்: பாகிஸ்தான் அமைச்சர் அலறல்

இஸ்லாமாபாத், ஏப். 30– அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது. இந் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா […]

Loading

செய்திகள்

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி திடீர் ராஜினாமா

சென்னை, ஏப்.28-– அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நேற்று ராஜினாமா செய்தனர். அவர்களிடம் இருந்த துறைகள், அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் இடம்பெறுகிறார். சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் : சென்னை, ஏப்.26- தமிழகத்தில் இந்த நிறுவனத்தால் தற்போது 266 ஆதார் பதிவு உள்ளது. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * தமிழகத்தில் […]

Loading

செய்திகள்

மேட்டூர் அணை ஜூன் 12ல் திறப்பு:

அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு சென்னை, ஏப்.26- ”மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக திறக்கப்படும்” என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். தமிழக சட்டசபையின் நேற்றைய கூட்டத்தொடரில், மேட்டூர் அணை திறப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்து, சட்டசபையில் துரைமுருகன் பேசியதாவது: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஆறுகள் வாய்க்கால்கள் வடிகால்களில் மண் திட்டுகள் உள்ளது. தண்ணீர் தங்குயின்றி செல்ல, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 5,021 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாசன கால்வாய்களை […]

Loading

செய்திகள்

சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் சர்வதேச தரத்தில் தைவான் தொழில் பூங்கா

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு : சென்னை, ஏப்.26- சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் தைவான் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். சட்டசபையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- * அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்த நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் அமைக்கப்படும். * […]

Loading

செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் தமிழர்கள் படுகாயம் தமிழக அதிகாரி காஷ்மீர் செல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஏப்.23–- காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அதிகாரி காஷ்மீர் சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-– ஜம்மு -காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் தமிழர்களான டாக்டர் பரமேஸ்வரன், (சென்னை) சந்துரு (வயது 83), பாலச்சந்திரா (57) ஆகிய 3 பேர் படுகாயம் […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை, ஏப். 20– திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தான் மாற்றத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் அரசாக அவர்களின் நலனை காத்து உரிமை நிலை நாட்டும் அரசாக தமிழ்நாடு அரசு […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் சென்னை, ஏப்.18- தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சரவை கூட்டம் நிறை வடைந்ததும் தலைமைச் செயலக வளாகத்தில் தொழில்துறை […]

Loading