லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் மாலையில் மலை உச்சியில் மகாதீபம்; பொதுமக்கள் மலைஏற தடை திருவண்ணாமலை,டிச. 13– திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் பக்தர்களால் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. சிவபெருமான் மலை வடிவமாக ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா 10 […]