சென்னை, ஜன 30– சென்னையில் அப்போலோ மருத்துவமனையின் 3வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:– ‘இந்தியாவில், புற்றுநோய்க்கான சிகிச்சை பராமரிப்பை புரட்சிகரமாக ஆக்குவதில் அப்போலோ கேன்சர் சென்டர்கள் மற்றும் அவர்களது குழுவினர் மேற்கொண்டு வரும் தளர்வில்லாத முயற்சிகளை மனதார பாராட்டுகிறேன். வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இம்மையம் தொடங்கியிருப்பது புற்றுநோய்க்கு எதிரான எமது ஒருங்கிணைந்த யுத்தத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்பதில் ஐயமில்லை என்றார். அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் […]