செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி அபராதம்

புதுடெல்லி, டிச. 18– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மைக் காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த மிரட்டலானது உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடு செல்லும் விமானங்களுக்கும் விடுக்கப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக அவதிப்படுவதோடு, அவர்களின் பயணமும் கால தாமதாகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 24 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்தாண்டு ஜனவரி […]

Loading

செய்திகள்

சொத்து ஆவணம் பதிவுசெய்ய மறுத்த சார்-பதிவாளருக்கு அபராதம் : மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை, நவ. 2 ஐகோர்ட் உத்தரவுக்கு பின்பும் சொத்து ஆவணங்களை பதிவு செய்ய மறுத்த சார்-பதிவாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள்சாமி, ராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்து தரும்படி திண்டுக்கல் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால் அவற்றை பதிய மறுத்து சார்-பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த […]

Loading

செய்திகள்

பாலங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் இல்லை

தாம்பரம் மாநகர போலீஸ் அறிவிப்பு சென்னை, அக். 15– பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். சென்னைவாசிகள், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் இம்முறை அவ்வாறு ஒரு சூழல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு […]

Loading

செய்திகள்

14-ந் தேதிக்குள் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகளை அகற்றாவிட்டால் அபராதம்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை சென்னை, அக்.5- சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரை தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கூவம் ஆற்றில் […]

Loading

செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் ரூ.79 ஆயிரம் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தகவல் சென்னை, அக்.5– பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவர்களுக்கு ரூ. 79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதைக் கண்காணித்திட ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்புக் குழு அமைத்து, 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் அல்லாமல் […]

Loading