செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, பிப். 24– அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. ஞானசேகரனிடம் சிறப்பு குழு […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜன. 5– மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அண்ணா பல்கலைக்கழக பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் வெளிநபர்கள் […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜன. 4– சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலமான சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அங்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் எப்.ஐ.ஆர் கசிந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

Loading

செய்திகள்

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சென்னை, டிச. 30- மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 பேராசிரியைகள் கொண்ட பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக […]

Loading

செய்திகள்

பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன்: த.வெ.க. தலைவர் விஜய் கடிதம்

சென்னை, டிச. 30– பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டு மன வேதனை அடைந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு அண்ணனாகவும், அரணாகவும் துணை நிற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒரு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இச்சம்பவம் குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் இன்று தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி […]

Loading

செய்திகள்

மாணவி வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கியது

சென்னை, டிச. 30- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலன் விசாரணை குழு விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அண்ணா […]

Loading

செய்திகள்

மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் விரைவில் புகார் சென்னை, டிச.28- மாணவி பாலியல் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் உலகம் எங்கிலும் அறியும் பல்கலைக்கழகமாக விளங்கி வருகிறது. கடந்த 23-ந்தேதி, இரவு 7.45 மணிக்கு ஞானசேகரன் […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 900 அண்ணா தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் சென்னை, டிச.27– அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்திய அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த மர்ம நபர்கள்

சென்னை, டிச. 25– சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர்கள் காதலனை அடித்து விரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு தான் காதலிக்கும் 4ம் ஆண்டு மாணவர் உடன் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவரை தாக்கியுள்ளனர். மாணவரை […]

Loading