செய்திகள்

தஞ்சை அருகே நள்ளிரவில் அண்ணா தி.மு.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீச்சு

தஞ்சாவூர், ஏப். 30– தஞ்சையில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பாலமுருகன் வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை. அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ‘ஓ’ போடுவார்கள்

2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அண்ணா தி.மு.க. வெர்ஷன்: எடப்பாடி சென்னை, ஏப். 29– சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ‘ஓ’போடுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026ல் அண்ணா தி.மு.க. வெர்ஷன் தான் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி… சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி… பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி… […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அண்ணா தி.மு.க. இணைந்ததால் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

புதுடெல்லி, ஏப்.12- தமிழ்நாட்டில் பா.ஜ.க.–அண்ணா தி.மு.க. கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அண்ணா தி.மு.க. இணைந்தது மகிழ்ச்சி. கூட்டணியின் பிற உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்வோம். மாநிலத்துக்கு தொடர்ந்து சேவையாற்றுவோம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் ஒரு அரசு அமைவதை உறுதி செய்வோம்’ என குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர், […]

Loading

செய்திகள்

கோவை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை

கோவை, பிப். 25- வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து குவித்ததாக கோவை அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர மாவட்ட அண்ணா தி.மு.க. செயலாளராக இருப்பவர் அம்மன் கே.அர்ச்சுனன். கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வென்ற இவர் கோவை வடக்கு தொகுதி அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதற்கு முன்பு 2016–21 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி அண்ணா […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்: புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம்

ஈரோடு, ஜன. 22– ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியான மணிஷ் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அண்ணா தி.மு.க. புறக்கணித்துவிட்டது. பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடவில்லை. தி.மு.க., நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே பிரதானமாக தேர்தல் களத்தில் உள்ளன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளன. தேர்தல் […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 900 அண்ணா தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் சென்னை, டிச.27– அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்திய அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா?

குடியரசு நாள் அணிவகுப்புக்கு சுழற்சி முறையில்தான் அலங்கார ஊர்தி: அரசு விளக்கம் சென்னை, டிச. 23– குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்துள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமி […]

Loading

செய்திகள்

2025ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை, டிச.9– 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷகம் எப்போது நடைபெறும். வீர வசந்தராயர் கோவில் புனரமைப்பு பணிகள் எப்போது நடக்கும்? என்று அண்ணா தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியதாவது:– அடுத்த ஆண்டு […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது

சென்னை, நவ.2- தமிழக சட்டசபை வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் […]

Loading

செய்திகள்

ஆலந்தூர் கிழக்கு பகுதி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வைகைச்செல்வன், கே.பி. கந்தன்  பங்கேற்பு

சென்னை, அக். 25 சென்னை புறநகர் மாவட்டம், ஆலந்தூர் கிழக்கு பகுதி அண்ணா தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணி பிரசாத் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் எம்.எம்.பகீம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.வரதராஜன், மாவட்ட அணி செயலாளர்கள் கே.புருஷோத்தமன், ஏ.லட்சுமிகாந்தன் என்கிற லோகேஷ், பகுதி கழக அவைத்தலைவர் முன்னாள் கவுன்சிலர் எஸ்.டார்வின், பகுதி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர்கள் காவேரி கிருஷ்ணன், உமா […]

Loading