சூரிய ஆற்றலால் இயங்கும் சோலார் காரை கண்டுபிடித்து வடிவமைத்து
கொங்குநாடு கல்லூரி பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு மாணவர் பிரசன்னா தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
வாகன புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், பற்றி எரியும் பெட்ரோல் – டீசல் விலை என்ற பிரச்னைகளுக்கு தீர்வாக சூரிய ஆற்றலால் இயங்கக் கூடிய, சோலார் காரை தயாரித்துள்ளார் கொங்குநாடு கல்லூரி பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு மாணவர் பிரசன்னா.
காரின் மேற்பகுதியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருக்கும். இதில் இருந்து வெளிப்படும் சூரிய ஆற்றல் காரணமாக கார் இயங்குகிறது. சிலிக்கான், “செமி – கண்டக்டராக’ செயல்படுகிறது. இந்த காரை ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக இயக்கும் விதத்திலும் வடிவமைத்துள்ளார்.