கதைகள் சிறுகதை

லாயிட்ஸ் சாலை..! – ராஜா செல்லமுத்து

“இப்ப இருக்கிற அரசியல் எப்படி இருக்குன்னு நினைக்கிற? என்று கணேசன் கேட்க “அக்கரைக்கு இக்கரை பச்சை தான். எல்லாமே ஒரே குட்டையில ஊறுன மட்டை தான் “ என்று வாசு சொல்ல ” நீ சொல்றதும் சரிதான். அவங்க ஆட்சிக்கு வந்தா, இவங்களத் திட்டுறாங்க. இவங்க ஆட்சிக்கு வந்தா அவங்களத் திட்டுறாங்க. இது தான் அரசியல். நாட்டுக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு யாரும் சொல்றதில்ல அவங்க அவங்க புகழ் பெறணும் சம்பாதிக்கணும்னு தான் ஆசைப்படுறாங்க. யாரும் மக்களுக்குச் […]

Loading

கதைகள் சிறுகதை

எத்திராஜ் சாலை..! – ராஜா செல்லமுத்து

… அன்று மகளிர் தினம். ரொம்பவே பரபரப்பாக இருந்தது, எத்திராஜ் மகளிர் கல்லூரி. “இன்னைக்கு யார் சிறப்பு விருந்தினர் ? “ ‘‘திருமதி.சுடர்க்கொடி கண்ணன். கல்லூரி முதல்வர், பெரிய எழுத்தாளர். சமூக சீர்திருத்தவாதி. நம்ம கல்லூரியின் முன்னாள் மாணவி. பெண்கள் முன்னேற்றத்திற்காகப் போராடும் போராளி. அவங்களப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?” “தெரியும் . ஆனா, சந்திச்சதில்ல. அவங்க பொண்ணு கூட இங்க தான் படிச்சிட்டு இருக்காங்கன்னு தெரியும்”. “எஸ். அவங்க தான் இன்னைக்கு நம்ம எத்திராஜ் கல்லூரிக்கு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … பின்னி சாலை 14 …! … ராஜா செல்லமுத்து

இரவு வானம் விடிவதற்குள் ஒவ்வொரு அறையாகத் தட்டிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். திரைப்படத் தயாரிப்பு மேலாளர். நேரமாச்சு. எல்லாரும் எந்திரிங்க. சூட்டிங் போகணும். எல்லாரும் எந்திரிங்க. டீ, காபி வரும் குடிச்சுருங்க. அஞ்சு மணிக்கு எல்லாம் கார் வந்துரும். சீக்கிரமா போனாத்தான், படப்பிடிப்புத் தளத்துக்குப் போக முடியும். எல்லாரும் எந்திரிங்க” என்று அறைகளில் தங்கியிருந்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார், முனிரத்தினம். “ஐயா இன்னைக்கு எங்க சூட்டிங்? இவ்வளவு சீக்கிரமா கிளப்பி விடுறீங்களே?” என்று நடிகையின் உதவியாளர் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கோவிந்தன் சாலை 11 ..! … ராஜா செல்லமுத்து

” பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருளும் எடுத்தாச்சா? ” எடுத்தாச்சு” “எத்தனை மணிக்குப் போகணும் ? “ ” நாம முடிவு பண்ணுறது தான் “ “காலையில போனா போக்குவரத்து நெரிசல் இருக்கும். சாயங்காலம் போனாலும் அதே நிலைமை தான் ” இடைப்பட்ட நேரத்தில் பன்னெண்டு மணிக்கு மேல போனமுன்னா அந்த சாலை ஓய்வா இருக்கும்னு நினைக்கிறேன்” என்று கமலக் கண்ணனும் விஜயகுமாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ” அங்கே என்னென்ன பண்ணனும்? “ ” நேரம் இருந்தா […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … தங்கச் சாலை 8 …! …. ராஜா செல்லமுத்து

வாடிக்கையாளர் கொடுத்த பத்து ரூபாய் நாணயத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், பலசரக்குக் கடைக்காரர். ” சார், எல்லாம் நல்ல காசு தான். என்னமோ இந்தப் பத்து ரூபா நாணயத்த நாங்களே அச்சு வார்த்துக் கொடுத்த மாதிரியே இப்பிடி உத்து உத்துப் பார்த்துகிட்டு இருக்கீங்க? எல்லாம் உங்களை மாதிரிக் கடைக்காரங்க எங்களுக்கு கொடுக்கிற காசு தான் சார் . நம்பி வாங்கிப் போடுங்க. எதுவும் வராது” என்று கடைக்காரரிடம் தன் நாணயத்தைப் பற்றி நாணயமாகப் பேசினான், நாராயணன் […]

Loading

கதைகள் சிறுகதை

ஈ.வெ.ரா.பெரியார் சாலை 7 …! – ராஜா செல்லமுத்து

‘ரண்டக்க… ரண்டக்க… ரண்டக்க…டும்… டும்டும்டா… டும்டும்டா…டும்டும்டா…’ என்று அந்தச் சாலை முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது, தாரை தப்பட்டை. அந்தத் தாளத்திற்குத் தகுந்தது போல ஆடிக்கொண்டிருந்தார்கள், இளசுகள். அதனோடு பெருசுகளும் சேர்ந்து இருந்தார்கள். “வருசத்துல ஒரு நாள் இப்படி சந்தோஷமா இருந்தா தானே வருசமெல்லாம் நல்லா இருக்கும். இந்தத் திருவிழாக்களெல்லாம் தினந்தோறும் இருந்தா எப்படி இருக்கும்? ” என்று ஒரு பெருசு கேட்க “நல்லா இருக்காதுங்க. ஒரு நாளைக்கு தீபாவளி வந்தா தான் நல்லா இருக்கும். தினந்தோறும் தீபாவளி […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கல்லூரிச் சாலை 5 …! …. ராஜா செல்லமுத்து

நக்கல், நையாண்டி, கானா பாட்டு, கேலிக் கவிதைகள் என்று கூச்சலும் குழப்பமுமாகத் தார்ச்சாலையில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த நகரப் பேருந்து. ” ஏன் தான், இவனுக இப்பிடி இம்சை பண்றானுகளோ தெரியல? இவனுக எல்லாம் படிச்ச ஆளுகளா ? இல்ல ரவுடிப் பயலுகளா ? என்று பொதுமக்கள் புலம்பினாலும் எதையும் சட்டை செய்யாத அந்தக் காவாலிகள், மேலும் மேலும் சத்தம் போட்டுக் கிண்டல் செய்து கொண்டே வந்தார்கள். ” தம்பி, இந்த பஸ்ல நீங்க மட்டும் பயணம் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … ஆற்காடு சாலை 4 ..!. ….. ராஜா செல்லமுத்து

” எங்கே கிருஷ்ணனைக் காணோம் ? என்று நண்பர்கள் கேட்க, ” கிருஷ்ணனா ? இந்நேரம் அவர் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு இருப்பாரு “ என்றார் , கிருஷ்ணனின் நண்பர்களில் ஒருவரான மூர்த்தி. ” ஆற்காடு சாலையா ? அங்க எதுக்குப் போறாரு ?” ” எந்த வேலையா இருந்தாலும் ஆற்காடு சாலைக்குப் போயிட்டு வந்த பிறகு தான் மத்த வேலைகளைப் பார்ப்பாரு. இது எந்த ஒரு நாளும் தவறுனதே இல்ல” ” அப்படியா? ரொம்ப ஆச்சர்யமா […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கண்ணதாசன் சாலை 3 ..! ….. ராஜா செல்லமுத்து

காவல்த் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக ஒரு போன் கால் வந்தது. அந்த அழைப்பை ஏற்ற காவல்த் துறை அதிகாரி “அப்படியா எங்கே?” என்று கொஞ்சம் வியப்பாய்க் கேட்டார். “கண்ணதாசன் சாலையிலே சார்” “கண்ணதாசன் சாலையா?” “ஆமா சார்” “சரி, உடனே அங்க போலீஸ அனுப்புறேன். அங்க ஏதும் பிரச்சினை வந்தா எங்களுக்கு உடனே போன் பண்ணுங்க” என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல “சரிங்க சார்” என்று அந்த அழைப்பைத் துண்டித்தான், தகவல் சொன்னவன். சிறிது நேரத்திற்கெல்லாம் […]

Loading

கதைகள் சிறுகதை

செய்த பிழக்கு- மு.வெ. சம்பத்

தண்டபாணி, தரணி, பாலன் மூவரும் சகோதரர்கள். தண்டபாணி குடும்பக் கணக்கு வரவு, செலவு, நில புலங்களை கவனித்து வந்தார். பண வசதியைப் பெருக்கி வைத்தார். ஒரே வீட்டில் இருந்த மூவரில் இருவர் தனித்தனியே பங்களா மாதிரி வீடு கட்டிக்கொண்டு சென்றார்கள். தண்டபாணி பழைய வீட்டில் தங்கினார். தண்டபாணிக்கு ஒரே மகன். காலம் கடந்து பிறந்தவர் அவர். பெயர் சுகந்தன். நன்கு படித்த சுகந்தன் தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென்று தண்டபாணி […]

Loading