சுவாமிநாதன் பிஞ்சிலேயே அறிவுக் குழந்தையாக இருந்தான். எதையும் கற்பூரம் போல பற்றிக் கொள்ளும் சாமர்த்தியம். எது செய்தாலும் அங்கதம் கலந்த செய்கை. சேட்டைகளின் சிற்றரசன் மௌன விரதம் இருந்தால் கூட பேசிக் கொண்டே இருக்கும் பேச்சாளனாக இருப்பான். மற்ற பிள்ளைகள் எல்லாம் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்களை தினமும் படித்து அத்தனையையும் தலையில் ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது, சுவாமிநாதன் தேர்வு நாள் வரை எதுவும் படிக்காமல் தேர்வுக்கு முதல் நாள் இரவு அத்தனையும் படித்து தேர்வு எழுதும் […]