சிறுகதை

வள்ளிநாயகம் – ராஜா செல்லமுத்து

… தொடர் விடுமுறை காரணமாக வள்ளி நாயகத்தின் மனைவி ராஜலட்சுமியும் மகள் பிரியாவும் பேத்தி தர்சினியும் திருநெல்வேலிச் சீமையிலிருந்து, தன் சொந்தக் கிராமமான இலஞ்சிக்குச் சென்று காெண்டிருந்தார்கள். புரட்டிப் போட்ட புயலின் தடம் கொஞ்சம் மாறி, இயல்பான வாழ்க்கைக்கு வந்து கொண்டிருந்தார்கள், மக்கள்.பேருந்து வரும் தார்ச்சாலைப் பாதையெங்கும், வள்ளி நாயகத்தின் நினைவுகள் ராஜலட்சுமியின் ஆழ்மனதில் கிடந்து துடித்தன. மகள் பிரியா தன் தாயை ஆற்றுப்படுத்திக் கொண்டே வந்தாள். விரையும் பேருந்தை இசைஞானி இளையராஜாவின் பாடல் நிறைந்திருந்தாலும், ஏதோ […]

Loading

சிறுகதை

இடம் பெயர்தல் – ராஜா செல்லமுத்து

… கண்மணிக்கு அன்று நடந்தது ரொம்ப உறுத்தலாகவே இருந்தது. தான் செய்த தவறுக்கு தான் இப்போது தண்டனை கிடைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அன்று நடந்ததை வேண்டுமென்றே அவள் செய்யவில்லை. ஆனால் இன்று நடப்பது அன்று நடந்ததின் பிரதிபலிப்போ என்று கவலை கொண்டாள். இருக்கலாம் காலம் எல்லாவற்றிற்கும் பதில் தரும் என்பதை அவள் அன்று உணரத்தான் செய்தாள். நகரில் உள்ள பிரதான மருத்துவமனையில் தன் குழந்தைக்கு காய்ச்சலுக்காக அமர்ந்திருந்தவளை முன்னால் பதிவு செய்தவர்கள் அனுமதிக்கவே இல்லை. […]

Loading

சிறுகதை

பேப்பர் – ராஜா செல்லமுத்து

… பனிவிழும் அதிகாலையில் தன் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டுபோய் ஒவ்வொரு வீடாகப் பேப்பர் போடுவார் ஜெகன். அவர் ஒருபோதும் தன்னுடைய வேலையை நிறுத்துவதில்லை; விடுமுறை எடுத்துக் கொண்டு கூட யாரையாவது அனுப்பலாம் என்று நினைத்தால் அன்றைக்கு சம்பளம் போய்விடும் என்று வேலைக்கு கிளம்பி விடுவார் ஜெகன் . அவருக்கு குடும்பம் குழந்தைகள் என்று இருக்கிறார்கள் வெயில், மழை, புயல் எதுவாக இருந்தாலும் அதிகாலைக்கெல்லாம் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பேப்பர் போடும் வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு […]

Loading

சிறுகதை

“ஜானகியும் செல்வியும்”-ராஜா செல்லமுத்து

… பெண் என்பவள் பெரும் பலம். அகிம்சை ஆயுதம்.அன்பை உருக்கி உயிரில் ஊற்றும் உன்னதப் படைப்பு. இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தில் ஜானகியும் செல்வியும் இணைபிரியாத தோழிகள்.இருவரும் இரு நாசிகளில் இடம் மாறி மாறி சுவாசித்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் மூச்சுக்காற்று என்னவோ ஒன்றாகத்தான் இருக்கும். இருவரின் நட்பைக் கண்டுச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் புன்னகை பூக்க மாட்டார்கள். பொறாமை தான் படுவார்கள் . அந்த அளவிற்கு ஜானகியும் செல்வியும் ரத்தமும் சதையும் கலந்த ஒரு ஜீவனாய் […]

Loading

சிறுகதை

வெள்ளத்தின் வெகுமதி- ராஜா செல்லமுத்து

.. புயல், மழை, வெள்ளம் மனிதர்களுக்கு எவ்வளவோ பாதிப்பைத் தந்து வாழ்க்கைத் தரத்தை முடக்கி இருந்தாலும் அது ஒரு சில நன்மைகளை செய்து விட்டு தான் சென்றிருக்கிறது என்பதை ஆணி அடித்தால் போல முருகனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாலு அது எப்படி சொல்றீங்க பாலு? நீங்க சொல்றது ரொம்ப தப்பு. மனுசனோட வாழ்க்கை தரம் காெரஞ்சிருக்கு .இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்காேம். இந்த வெள்ளம் என்னென்னமோ பிரச்சனை கொண்டு வந்து மக்களுக்கு கொடுத்திருக்கு .இத போய் நல்லதுன்னு சொல்றீங்களே […]

Loading

சிறுகதை

பேசா ஓவியம் – ராஜா செல்லமுத்து

கருணா நல்ல ஓவியன். தன் கண்ணில் படும் அத்தனையும் கையில் கொண்டு வந்து அதை ஓவியமாக வடிக்கும் ரசனைக்காரன். அவனுடைய எண்ணமெல்லாம் நல்ல ஓவியங்களை வரைய வேண்டும் என்று தான் இருந்தது. அவன் பெரும்பாலும் மொட்டை மாடியில் தான் ஓவியங்களை வரைந்து கொண்டிருப்பான். வெட்ட வெளி. நீண்ட வானம். காது மடல்களை தொட்டுப் போகும் தென்றல் என்று இயற்கையோடு இயற்கையாக கலந்து அவன் ஓவியங்களை வரைந்து கொண்டு இருப்பான். அவன் மொட்டை மாடிக்கு வரும் போதெல்லாம் எதிர் […]

Loading

சிறுகதை

“மாய மழை”- ராஜா செல்லமுத்து

அதுவரை வெயிலைப் போர்த்தியிருந்த வெட்ட வெளியைக் கருமேகங்கள் மறைத்துத் தூறல் தோரணங்களைப் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது வானம். அலுவலகத்திற்கு தயாராகி வெளியே வந்தான் நிலாநேசன். இரவெல்லாம் காெட்டித் தீர்த்த கனமழையில் வீதி எங்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது.போதாக்குறைக்கு இப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது. அலுவலகத்திற்குப் போவது உசிதமல்ல. எங்கு பார்த்தாலும் மழை. இந்த மழையில் நாம் சென்றால் நிச்சயம் நனைந்து விடுவோம் .அதுவும் சென்னை மழை விவகாரமானது . தண்ணீர் தேங்குவதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை . […]

Loading

சிறுகதை

இப்படி நடந்தால்….மு.வெ. சம்பத்

திருப்பதி நன்றாகத் திட்டமிட்டு வாழ்வை நடத்தி ஒரு அரசராகவே வலம் வந்தார். அவர் மனைவி தயாசினி தன் கணவருடன் கை கோர்த்து செல்வதில் ஆனந்தம் அடைபவர். இவர்களுக்கு வாரிசாக இரண்டு மகன்களும் ஒரு மகளும் வலம் வந்தனர். திருப்பதி தான் செய்ய வேண்டிய கடமையைச் சரியாகச் செய்து தனது வாரிசுகளை நன்றாக படிக்க வைத்தார். அவர்கள் தற்போது அரசாங்க வேலை கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வலம் வருகிறார்கள். மகன்கள் பெயர் ஆதிரன், சமரன். மகள் அகல்யா. எல்லோருக்கும் […]

Loading

சிறுகதை

பாஸ் வேர்டு – ராஜா செல்லமுத்து

முன்னிரவு முற்றி பின்னிரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது இரவு .லேசாக தூறல் போட்டுக் கொண்டிருந்தது வானம். எங்கோ கத்திக் கொண்டிருந்தன நாய்கள். பரசுராமன் புரண்டு புரண்டு படுத்தான். வெப்பத்தை விட்டுக் குளிரை போர்த்தியிருந்தது தரை. வெறும் தரையில் பாயை மட்டும் விரித்துப் படுத்திருந்த பரசுராமனுக்கு கொஞ்சம் ஈரம் தட்டியது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்த பரசுராமனின் காதில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டை போடும் சத்தம் கேட்டது. என்ன இது? இந்த நடு ராத்திரியில் அதுவும் மழை நேரம் யாரு […]

Loading

சிறுகதை

பந்தி – ராஜா செல்லமுத்து

ஆடம்பரமான ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு விஜய் தன் நிறுவன முதலாளியுடன் சென்றிருந்தான். எப்படியும் இன்றைக்கு நாவுக்கு ருசியான சாப்பாடு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாயில் எச்சில் ஊற அமர்ந்திருந்தான் விஜய். ஆனால் திருமண வரவேற்பு முடிந்ததும் சட்டென கிளம்பினார் முதலாளி. ஏன் இவர் சாப்பிடாம போறாரு? சாப்பிட்டு போலாமா? என்று கேட்டு விடலாமா ? என்று கூட விஜய்க்கு தோன்றியது . இதை எப்படிக் கேட்பது ? என்று மனதுக்குள்ளே ஊறப்பாேட்டு அந்தத் திருமண […]

Loading