பேச்சியம்மாள் கிழவிக்கு வயது நூறைத் தொட்டிருக்கும். அவர் இறப்பு ஒரு பூரண இறப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த இறப்பிற்கு சொந்த பந்தங்கள் தவிர ஒரு கூட்டமே குழுமியிருந்தார்கள். 100 வயது கடந்த பேச்சியம்மாளை ஒரு திருவிழா போல எடுத்துச் சென்று தான் அடக்கம் செய்தார்கள் . பேச்சியம்மாளின் மகன் பொன்னரசு. அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்தார். அந்த ஏரியா மனிதர்களுக்கும் அந்த ஊரைச் சார்ந்தவர்களுக்கும் அவர் எத்தனையோ உதவிகள் செய்து கொண்டிருந்தார். அதனால் அந்த […]