சிறுகதை

கந்த சஷ்டி கவசம்..! – ராஜா செல்லமுத்து

சுவாமிநாதன் பிஞ்சிலேயே அறிவுக் குழந்தையாக இருந்தான். எதையும் கற்பூரம் போல பற்றிக் கொள்ளும் சாமர்த்தியம். எது செய்தாலும் அங்கதம் கலந்த செய்கை. சேட்டைகளின் சிற்றரசன் மௌன விரதம் இருந்தால் கூட பேசிக் கொண்டே இருக்கும் பேச்சாளனாக இருப்பான். மற்ற பிள்ளைகள் எல்லாம் பள்ளியில் சொல்லித் தரும் பாடங்களை தினமும் படித்து அத்தனையையும் தலையில் ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது, சுவாமிநாதன் தேர்வு நாள் வரை எதுவும் படிக்காமல் தேர்வுக்கு முதல் நாள் இரவு அத்தனையும் படித்து தேர்வு எழுதும் […]

Loading

சிறுகதை

தாமத உணவு..! …. ராஜா செல்லமுத்து

” மூணு மணி ஆகப் போகுது இன்னும் மதியம் சாப்பிடலையா? என்று எதிர் திசையில் இருந்து திட்டினாள், பானு “இல்ல இன்னும் சாப்பிடல ” என்று உதட்டில் ஒட்டியும் ஒட்டாமல் பதில் சொன்னான் கிருஷ்ணன் ” ஏன் சாப்பிடல?” ” பிடிக்கல “ “ஏன் பிடிக்கல? “ ” பிடிக்கலன்னா பிடிக்கல “ ” சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும். நீ சாப்பிடாம இருக்கிறதனால, இங்க எதுவும் நடக்க போறதில்ல ” கடிந்து கொண்டாள், […]

Loading

சிறுகதை

அப்பாவின் கதை….! – ராஜா செல்லமுத்து

…. செல்வி இன்று பெரிய பேச்சாளர். கதை .கவிதை. கட்டுரை என்று எது கொடுத்தாலும் வெளுத்து வாங்கி விடுவார் ஆசிரியர் தொழில் செய்து கொண்டிருக்கும் அவருக்குள் பன்முகத் திறமைகள் கொட்டிக் கிடப்பதாக உடன் பணி புரியும் ஆசிரியர்களும் அவளுடைய மேடைப்பேச்சைக் கேட்பவர்களும் சொல்வார்கள். அதிலும் ஓவியம், பாட்டு என்றால் அவளுக்கு உயிர். அவ்வளவு நேர்த்தியாக கதை சொல்வாள். தொடக்கத்தில் ஆரம்பிக்கும் அந்தக் கதையை ஒரு திரைப்படம் பார்ப்பது போல் விவரிக்கும் பாங்கு சிறப்பாக இருப்பதாகக் கூறுவார்கள் . […]

Loading

சிறுகதை

தேசிய கீதம்..! – ராஜா செல்லமுத்து

தமிழ் பேசும் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது தரக்குறைவு பிறமொழிகள் தெரிந்திருப்பது தான் பெருமை என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்கள் வாழும் இந்த மாநிலத்தில் தன் அடையாளத்திற்காக ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார் பரந்தாமன். அவருக்கு எழுதுவது என்பதை விட அந்தப் புத்தகத்தை வெளியிடுவது தான் பெருமை என்று நினைத்திருந்தார். அதன்படியே அந்தப் புத்தகத்தை தமிழ்நாட்டில் உள்ள பிரபலங்களை வைத்து வெளியிடவும் ஏற்பாடு செய்திருந்தார் .குளிரூட்டப்பட்ட ஒரு அரங்கத்தில் விழா நடத்தப்பட்டது .பிரபலமானவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார்கள். மேடையில் ஏறாதவர்கள் எல்லாம் […]

Loading

சிறுகதை

வலை தளங்கள்..! – ராஜா செல்லமுத்து

கிராமத்திலிருந்த வீட்டை அழகாகக் கட்டியிருந்தாள், நிர்மலா. ஆடம்பரமான பொருட்கள் வீட்டில் நிறைந்திருந்தன. போதாக்குறைக்கு கார், ஆடம்பரப் பொருட்கள், வசதி வாய்ப்புகள் என்று குறுகிய காலத்திலேயே வளர்ந்து விட்டாள். ஊரில் இருப்பவர்கள் அவர்களின் வளர்ச்சியைக் கண்டு வயிற்றெரிச்சல் பட்டார்கள். சிலர் தூற்றினார்கள். சிலர் போற்றினார்கள். இப்படி இருந்தவள், இப்படி வந்து விட்டாளே? என்று சிலர் நிர்மலாவைப் பார்த்து பெருமைப்பட்டார்கள். இதுவெல்லாம் ஒரு பிழைப்பா? இப்படி வாழ்வதற்கு நாண்டுக்கிட்டு செத்துப் போகலாம் என்று சிலர் கொடுஞ் சொற்களால் அவளைக் கடிந்தார்கள். […]

Loading

சிறுகதை

ஆடைகள் …! – ராஜா செல்லமுத்து

.. ‘‘ரெண்டு ரெண்டு டிரஸா எடுத்திட்டு போங்க. மொத்தமா எடுத்துட்டு போக கூடாது” என்று டிரெஸ்ஸிங் டிரெய்லர் ரூம் பக்கம் நின்று கொண்டு சொல்லிக் கொண்டிருந்தாள் வனிதா மொத்தமா எடுத்துட்டு போனா என்னவாம்? போட்டுப் பாக்கத்தானே போறாேம். திருடிட்டா பாேகப் பாேறோம்?” என்று அவளுடன் வாதாடி கொண்டிருந்தான் ஜெய். ” இல்ல சார். ரெண்டு ரெண்டா தான் எடுத்துட்டு போகணும்ன்னு ரூல்ஸ் போட்டு இருக்காங்க .இத நான் சொல்லல. நிர்வாகம் சொல்லுது. அத நான் செய்றேன். என்கிட்ட […]

Loading

சிறுகதை

18 + 81 = ? : ஆர். வசந்தா

அன்று ஜனனியின் வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டாட்டமுமாக இருந்தது. ஏனெனில் சுமித்ராவை பெண் பார்க்கும் படலம் வெற்றிகரமாக முடிந்தது தான். ஜனனி ஒரு பெரிய கெமிக்கல் என்ஜினீயர். அதில் டாக்டரேட்டும் வாங்கி இருந்தாள். தகுந்த வரன் அமைய வேண்டுமே என்று அப்பா ரங்கநாதன் கவலையில் இருந்தபோது தான் ஸ்ரீகாந்தின் ஜாதகம் வந்தது. அவன் எலெக்ட்ரானிக்ஸ் துறை வல்லுநர். அவனும் டாக்டரேட் பட்டமும் வாங்கி இருந்தான். இருவருமே அவரவர் துறையில் உள்ள இந்தியாவின் தலைசிறந்த கம்பெனியில் பெரிய பதவியில் […]

Loading

சிறுகதை

மீன் செதில்கள்.! – ராஜா செல்லமுத்து

பிசுபிசுக்கும் மீன் வாசனை. சந்தடிகள் நிறைந்த மார்க்கெட். இன்னதென்று தெரியாத மனிதர்களின் குரல். கூட்டமும் கும்பலுமாய் இருந்தது அந்தச் சந்தை. யார் எதை வாங்குகிறார்கள்? எதற்காக நடக்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்று அறிய முடியாத மக்கள். சைவ உணவுப் பொருட்களை வாங்கும் கூட்டம் ஒரு பக்கம் .அசைவ உணவுப் பொருட்களை வாங்கும் கூட்டம் மறுபக்கம் என்று சைவமும் அசைவமும் கலந்த சந்தையாக இருந்தது அந்த இடம். முரளிதரன் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே சென்று கொண்டிருந்தான். இன்னைக்கு வெள்ளிக்கிழமை […]

Loading

சிறுகதை

மனசு…! – ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்த அந்தத் தனி பங்களாவில் வசித்து வந்தார்கள் நீலமேகம் குடும்பத்தார்கள். நீலமேகம் பெரிய வசதியானவர்; கடல் போல் படர்ந்து இருக்கும் அந்தக் கட்டிடத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்தார் நீலமேகம். ஜாதி , மதம் , இனம் , நிறம் , பேதம், பணக்காரன், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் பார்க்காத நல்ல மனிதர். அடிமட்டத்திலிருந்து இந்த நிலைக்கு வந்ததால் தன் நிலையை எப்போதும் மறக்காதவர். யார் எது கேட்டாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல் தரும் […]

Loading

சிறுகதை

திருப்பம்..! – ராஜா செல்லமுத்து

ஓட்டலுக்குள் நுழைந்த முரளியால் சாப்பிடவே முடியவில்லை .அவன் ஆர்டர் செய்தது. நல்ல அசைவ உணவு தான் என்றாலும் அவனால் அதை ஒப்பிச் சாப்பிட முடியவில்லை. அவன் முன்னால் மீன், கறி, பிரியாணி என்று அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் அவனால் அதை எடுத்து சாப்பிடுவதற்கு என்னவோ பாேல இருந்தது. அவ்வளவு பசியாக இருந்தது. சாப்பிடுவதற்குத் தானே இந்த ஓட்டலுக்குள் நுழைந்தோம் ? ஏன் நம்மால் சாப்பிட முடியவில்லை. மனம் கிடந்து அடித்துக் கொண்டது. எழுந்து போய் விடலாமா? என்று கூட […]

Loading