சிறுகதை

மனிதர்களின் மரியாதை – ராஜா செல்லமுத்து

பேச்சியம்மாள் கிழவிக்கு வயது நூறைத் தொட்டிருக்கும். அவர் இறப்பு ஒரு பூரண இறப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த இறப்பிற்கு சொந்த பந்தங்கள் தவிர ஒரு கூட்டமே குழுமியிருந்தார்கள். 100 வயது கடந்த பேச்சியம்மாளை ஒரு திருவிழா போல எடுத்துச் சென்று தான் அடக்கம் செய்தார்கள் . பேச்சியம்மாளின் மகன் பொன்னரசு. அரசாங்கத்தில் பெரிய உத்தியோகத்திலிருந்தார். அந்த ஏரியா மனிதர்களுக்கும் அந்த ஊரைச் சார்ந்தவர்களுக்கும் அவர் எத்தனையோ உதவிகள் செய்து கொண்டிருந்தார். அதனால் அந்த […]

Loading

சிறுகதை

சகுனம் – ராஜா செல்லமுத்து

பாண்டிக்கு எப்போது பார்த்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயங்கள், ஏவல், பில்லி சூனியம், எதிர்பார்த்து ஒரு ஆளைப் பார்த்தால் அவர்கள் மூலம் நல்லது நடக்கும் : இன்னொரு ஆளைப் பார்த்தால் தீங்கு நடக்கும். வீட்டை விட்டு வெளியே போனால் பூனை குறுக்கே வரக்கூடாது. வெறும் குடத்தோடு வரக்கூடாது. அவர்கள் – இவர்கள் தென்படக்கூடாது என்று சகுனக் கோட்பாடுகளை வைத்திருப்பான். அவன் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தான் வீட்டை விட்டு வெளியே கிளம்புவான். யாராவது […]

Loading

சிறுகதை

தங்க மனசுக்காரர் – எம்.பாலகிருஷ்ணன்

தன் தந்தை தணிகாசலத்திடம் ஒரு மாதமாக தனக்கு ஓர் அலைபேசி வாங்கிதரும்படி கேட்டுப் பார்த்தான் கார்த்திக். அவர் இதுவரை அவனுக்கு போன் வாங்கித்தரவில்லை அவனுக்குப் பெரும் வேதனையாக இருந்தது. அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். அவன் தந்தை ஒரு பெரிய சிமிண்ட் கடை உரிமையாளர். வியாபாரம் நல்ல அமோகமாக நடைபெறுகிறது. வசதியான குடும்பம் . வீட்டில் கார்த்திக் மூன்றாவது செல்லபிள்ளை . அவனுடைய அண்ணனுக்கு மட்டும் உடனே புதிய ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தவர் இவனுக்கு மட்டும் […]

Loading

சிறுகதை

நடைபாதையில் நடக்க முடியாதவர் – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் அமைந்துள்ள விசாலமான பூங்காவின் வாசலில் அமர்ந்திருந்தார் ஒரு காலை இழந்த ஒரு மனிதர் . இடது பக்கம் வலது பக்கம் என்று கடைகள் இருந்தன. குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள். சாப்பிடும் ஐட்டம் என்று எல்லாம் அங்கே விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜெயக்குமாரும் முத்துவும் அந்தப் பூங்காவிற்கு சென்றார்கள். வெப்பம் கக்கும் வெயிலை மறந்து சன்னமாக தென்றல் வீசும் அந்த மாலை நேரத்தில் இருவரும் பூங்காவிற்குள் நுழைந்தார்கள். சந்தடிகள் நிறைந்த […]

Loading

சிறுகதை

தீர்வு இது தான் -மு.வெ.சம்பத்

பாலு அன்று அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் பானு அவனிடம் ஒரு பதற்றத்துடன் நமது மகள் கலா பள்ளியிலிருந்து வந்ததில் இருந்து படுத்தே இருக்கிறாள். சற்று காய்ச்சல் அடிக்கிறது. பயமாக உள்ளது என்றாள். பாலு உடனே கலா படுத்திருந்த அறைக்குச் சென்று பார்த்தான். துவண்டு போய் படுத்திருந்த கலாவைக் கண்டு கலக்கமடைந்தான். உடம்பு வெப்ப நிலை சற்று அதிகமாக இருந்ததைக் கண்டு உடனே தங்கள் குடும்ப மருத்துவருக்கு போன் செய்தான். அவர் கலாவை அழைத்து வரும்படி கூறியவுடன் பாலு, […]

Loading

சிறுகதை

கறார் பேர்வழி – ராஜா செல்லமுத்து

… மளிகை சாமான்கள் மொத்த விற்பனை, சில்லறை விற்பனை செய்யும் ஒரு பெரிய கடையில் நூற்றுக்கு அதிகமான ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பளம் முதல் முதல் அரிசி வரை அந்தக் கடையில் எல்லாம் கிடைக்கும் . முதல் தளம், இரண்டாவது தளம், மூன்றாவது தளம் என்று இயங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெரிய கடை. வேலைக்கு வரும் ஊழியர்கள் பேக்குகளை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள் காவலாளிகள். எல்லோரும் கீழே இருக்கும் முதல் தளத்தில் தான் […]

Loading

சிறுகதை

ஆண்கள் தேவை – ராஜா செல்லமுத்து

… எல்லா சமூக வலைதளங்களிலும் சுரேஷ் ரொம்பவே ஆக்டிவாக இருப்பான். பேஸ்புக்,டுவிட்டர் whatsapp என்று 24 மணி நேரமும் அவன் இருப்பு குறையாமல் இருக்கும். அதனால் எந்த செய்திகளும் அவன் பார்வைக்கு எட்டாமல் போவதில்லை . ஒரு நாள் டுவிட்டரில் வந்த ஒரு செய்தியை பார்த்து மிரண்டு போய் நின்றவனுக்கு அந்த செய்தியில் ஒரு ஆச்சரியம் கலந்திருந்தது. இது உண்மையாக இருக்குமா ?இல்லை இந்தச் செய்தியை அனுப்பிவிட்டு அதற்கு பின்னால் வேறு எதுவும் பெரிய சூழ்ச்சியை தோண்டி […]

Loading

சிறுகதை

ஆமாம் சார்.. – மு.வெ.சம்பத்

அதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தாள் மதுமதி. ஏனென்றால் அவள் அம்மா கோபம் வந்தால் சுற்றுச்சூழ்நிலை பாராது நன்கு திட்டி விடுவாள் என்ற பயம் அவளை நன்கு ஆட்கொண்டிருந்தது. மதுமதி : சாந்தினி – சுந்தர் தம்பதிக்கு ஒரே மகள். அவளை தமது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள பள்ளியில் சேர்த்தனர். மதியம் உணவு இடை வேளையின் போது சாந்தினி பள்ளி சென்று தனது மகள் மதுமதி கொண்டு போன சாப்பாட்டை சரியாக சாப்பிட்டாளா என்று கவனிக்கத் தவறுவதில்லை. […]

Loading

சிறுகதை

காம்பவுண்டு வீடுகள் – ராஜா செல்லமுத்து

கிராமப்புறங்களைப் போல் இல்லாமல் நகரங்களில் தனித்தனியாக வீடுகள் இருக்காது. ஒரே வீட்டில் தனித்தனி குடும்பங்கள் குடி வைத்திருப் பார்கள். அது வாடகையாக இருக்கலாம் அல்லது லீசுக்காக இருக்கலாம். அது ஒரு காம்பவுண்டு வீடாகவே இருக்கும். முன்பின் தெரியாதவர்கள் வெளியூர்க்காரர்கள், வேற மொழி பேசுவார்கள் என்று அத்தனை பேர்களும் அந்த காம்பவுண்டு வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் இணக்கமாக இருப்பார்கள். ஒரு சிலர் முகம் கொடுத்து கூட பேசாமல் போய்விடுவார்கள். எதிர் வீடு , பக்கத்து வீடு […]

Loading

சிறுகதை

சுகர் இருக்கா? – ராஜா செல்லமுத்து

சித்ராவிற்கு கடையிலிருந்து வந்ததிலிருந்து சிரிப்பு தாளாமல் இருந்தது. சிரித்துக் கொண்டே இருந்தாள் கூடவே வீட்டிலிருந்தவர்களும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கணவன் ரத்தினசாமி சொல்லிப் பார்த்தும் அவரால் உட சிரிப்பை அடக்க முடியவில்லை. ரத்னசாமியும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். சித்ராவின் மகள் விஜியும் சிரித்துக் கொண்டிருந்தாள். பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்தவர்கள் என்று எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அப்போது தான் வீட்டிற்கு வந்த உறவினரான வனஜாவுக்கு இவர்கள் ஏன் இப்படிச் சிரித்துக்காெண்டிருக்கிறார்கள் என்று பற்றித் தெரியாமல் இருந்தது. ஏன் […]

Loading