கதிரவன் அரசு அலுவலகத்தில் பெரிய அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். அடிக்கடி தான் வாழ்ந்த கிராமம், தனது அக்கா, வாழ்ந்த வீடு, நிலம் இவற்றைப் பற்றியே பேசுவது தான் இவரது வாடிக்கை. இந்தப் பேச்சு நாளடைவில் அவர் மனைவி கவிதாவுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது. தனது அக்காவிற்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படுவது கண்டு கதிரவன் மிகவும் வேதனையடைந்தார். அக்காவின் ஒரே பையன் நந்தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு விவசாயத்தைக் கவனித்து வருகிறான். சிறிய வயதில் குடும்பப் பொறுப்பை […]