சிறுகதை

கோயில் திருவிழா – ராஜா செல்லமுத்து

புரட்டாசி மாதம் அதிகாலையில் எழுந்து ஆண்டாள் பாசுரங்கள் பாடி திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாள் கோவிலில் பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எல்லாம் பெருமாள் கோயிலுக்கு தினமும் அதிகாலையிலேயே வந்து கொண்டிருந்தார்கள். அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிய பக்தர்கள் அந்த மாதம் முழுவதும் பயபக்தியோடு தெய்வீக சிந்தனையோடு வலம் வந்தார்கள் பயபக்தியோடு தினமும் பூஜை செய்தார்கள். திருவிழாவில் தினந்தோறும் கோயிலில் ஏதாவது ஒரு விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். திருவிழாவில் முதல் […]

Loading

சிறுகதை

குழுமைகள் – ராஜா செல்லமுத்து

கண்ணா இந்த கேப்பையை குழுமையில போட்டுட்டு வா என்று சொல்லுவாள் ஆத்தா . எந்த குழுமை ஆத்தா ? முதல் குமுமையா? கடைசிக் குழுமையா? என்று எதிர் கேள்விகள் கேட்டால் மாெதக் குழுமையில கேப்பையைப் போடு . ரெண்டாவது குழுமையில வரகரிசியைப் போடு, மூணாவது குழுமையில கோதுமையை போட்டு வை. நாலாவது குழுமையில அரிசியை போட்டு வை என்று ஒவ்வொரு குழுமையிலும் தனித்தனியாக தானியங்களைப் போடச் சொல்லுவாள் ஆத்தா. அவள் கீழே பரப்பி வைத்த தானியங்களை சாெலகு […]

Loading

சிறுகதை

வாங்காதீங்க! – ப.நந்தகுமார்

மகனுக்கு இன்று காலேஜ் பீஸ் கட்ட கடைசி நாள். ஏற்கனவே தன் நிலமையைக் கூறி கடன் கேட்டான் சென்னப்பன். காளிதாசன் தருவதாக தெரிவித்தார். அதனால் தன் மகன் செந்திலை அழைத்துக் கொண்டு அவர் வீட்டை நோக்கி தனது டூவீலரில் புறப்பட்டான் சென்னப்பன். “வீட்டிலிருந்து மெயின் சாலையை அடையும் வரை ஒத்தையடிப் பாதை என்பதால் மிகவும் மெதுவாகவே வண்டியை ஓட்டி சென்றான் சென்னப்பன். “அப்பா ஒரு நிமிடம் வண்டியை நிறுத்துங்கள்” என்ற தனது மகன் செந்திலின் கூக்குரலை கேட்ட […]

Loading

சிறுகதை

இன்றைய ஆதங்கம்! – இரா. இரவிக்குமார்

சுசீலாவின் தாத்தா சங்கரின் சதாபிசேகத்திற்கு யாரும் எதிர்பாராமல் வந்திருந்த ரகு, அந்த முதிய தம்பதியர் கால்களில் நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வாழ்த்த வேண்டியபோது அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமும் ஆதங்கமும் கொண்டு திக்குமுக்காடிப் போனார்கள். “ எல்லா வளமும் நலமும் அடைஞ்சி நீ பெரு வாழ்வு வாழணும்டா!” என்று சொல்லி அவனை வாரித் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் தாத்தா. ரகு வேறு யாருமல்ல! சங்கரின் பேத்தி சுசீலாவை மணந்தவன். தற்போது பேத்திக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்த பேத்தியால் விவாகரத்து […]

Loading

சிறுகதை

பூ முடிச்சுகள் – ராஜா செல்லமுத்து

பிரதான சாலையில் ஒரு ஜவுளிக்கடையின் முன்னால் இரண்டு பக்கமும் தரையில் பூவை வைத்தபடி அமர்ந்திருந்தார்கள் சாந்தி, வசந்தி என்ற இரண்டு பெண்கள். கூடையில் பூ இருந்தாலும் பூக்களை பொட்டலம் பொட்டலமாகக் கட்டித் தரை எங்கும் பரப்பி வைத்திருந்தார்கள் அது பிரதான சாலை என்பதால் போகிறவர்கள் வருகிறவர்கள் என்று அத்தனை பேரும் அதைக் கடந்து தான் செல்ல வேண்டும். அப்படி கடந்து செல்பவர்கள் வாங்கும் வியாபாரத்திற்காக தான் சாந்தியும் வசந்தியும் அந்தத் தரையில் பூக்கடையைப் பரப்பியிருந்தார்கள். அந்த வழியாகப் […]

Loading

சிறுகதை

பொய் – ஆவடி ரமேஷ்குமார்

‘ ஆப்பிள் கிலோ நூறு ரூபாய்’ என்று சிலேட்டில் எழுதி தொங்கவிட்டிருந்ததை பார்த்த கதிர் அந்த தள்ளு வண்டியின் முன் போய் நின்றான். ஒரு பெரியவர் இரண்டு கிலோ ஆப்பிள்களை ரூபாய் நூற்றி அறுபதுக்கு வாங்கிக் கொண்டு வண்டியை விட்டு சிறிது நகர்ந்து நின்று யாருக்காகவோ காத்திருக்க ஆரம்பித்தார். ஒரு கிலோ ஆப்பிளை வாங்கிய கதிர் எண்பது ரூபாயை நீட்ட, ” நூறு ரூபாய் கொடுங்க சார். சிலேட்ல எழுதியிருக்கு பாருங்க” என்றார் கடைக்காரர்.” அந்த பெரியவர்கிட்ட […]

Loading

சிறுகதை

நித்தம் ஒரு வானவில் – ராஜா செல்லமுத்து

இத்தனை அழகான பெண்ணை அந்தத் தெருவில் இதுவரை சதீஷ் கண்டதில்லை. காலில் இருந்து தலைவரை பலவண்ணத்தில் அச்சடித்தது போன்ற அழகில் வார்க்கப்பட்டிருந்தாள் அபிராமி. அவள் பெயரை கேட்டதும் அபிராமி அந்தாதி பாடி விட வேண்டும் போல சதிசுக்குத் தோன்றியது. அபிராமியே அவளாக இருக்க அவளைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் அந்தாதியாகவே சதீஷ் இருந்தான். மௌனமே மொழியானாள்.சதீஷின் சத்தங்கள் தான் அவளைப் பார்க்க வைத்தது. சதீஷைச் சிறிதும் அவள் சட்டை செய்யவில்லை . அந்த அழகில் யார் இருந்தாலும் […]

Loading

சிறுகதை

சமத்துவம்- ராஜா செல்லமுத்து

ரவி எப்போதும் சமத்துவம் பற்றிப் பேசுவான். இந்த நாடு ,ஒரு சகோதர நாடு எல்லா மதத்தவர்களையும் எல்லா சாதிக்காரர்களையும் ஒன்றாகத்தான் மதிக்க வேண்டும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் மதங்களாக சாதிகளாக பிரிந்து கிடக்கிறார்கள் என்று எல்லோரிடமும் புலம்பித்தீர்ப்பான் ரவி . அவன் பேசுவதைச் சிலர் ஆமோதிப்பார்கள் . சிலர் எதிர்ப்பார்கள் . நீங்க சொல்றது சரிதான். எங்க பாத்தாலும் மத சண்டை போட்டுட்டு தான் இருக்காங்க. முதல்ல இருந்த மனிதர்களின் ஒற்றுமை இப்ப குறைஞ்சு போச்சு. நாமளும் […]

Loading

சிறுகதை

தமிழ்ப் பற்று – ராஜா செல்லமுத்து

சேகர் தமிழ்ப் பற்று மிக்கவன்.தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், கவிதைகள் என்று அத்தனையும் தேடிப் பிடித்து படிக்கும் பழக்கம் உள்ளவன். படித்து அறிவை வளர்த்த அளவுக்கு அவன் கைகளில் பணம் சேரவில்லை. அதைப் பற்றி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலுவல் நேரங்களைத தவிர மற்ற நேரங்களில் எல்லாம் தமிழ் மீது கண் வைத்திருப்பது தான் அவன் எண்ணமாக இருந்தது . தமிழ் படித்தால் பணம் கிடைக்குமா? அதிலிருந்து வருமானம் வருமா? என்றெல்லாம் வியாபாரிகள் போல் அவன் கணக்குப் […]

Loading

சிறுகதை

தள்ளுபடியில் பிரியாணி – ராஜா செல்லமுத்து

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரியாணிக் கடையில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது. 100 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி என்ற அறிவிப்பு அந்தப் பகுதி மக்களையே சந்தோஷத்திற்கு உள்ளாக்கியது. சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட ஒரு நாள் பிரியாணி சாப்பிட்டால் தப்பில்லை; நாளையிலிருந்து சைவத்தை கடைப்பிடிக்கலாம் என்று பேசிக் கொண்டார்கள். புரட்டாசி மாதம் என்பதால் பிரியாணி சாப்பிட மாட்டார்கள் என்று தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ஒரு சிலர் பேசிக் கொண்டார்கள். சரி இந்த ஞாயிற்றுக்கிழமை பிரியாணி […]

Loading