சிறுகதை

பிளாக் டிக்கெட்..! – ராஜா செல்லமுத்து

பிரபலங்கள் நடித்து வெளிவரும் திரைப்படங்களை குருபரன் முதல் நாளே பார்த்து விடுவார் .அதுவும் குடும்பத்துடன் முதல் காட்சி முதல் நாள் பார்ப்பது என்பது அவ்வளவு ஆனந்தம். பிறந்த குழந்தையை முதல் முதலாக தொட்டுப் பார்த்து ஆனந்தம் அடைவதைப் போல புத்தம் புது காப்பியை முதன் முதலாகத் திரையில் பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷம் இருக்கும் என்று பீத்திக் கொள்வார் குருபரன். ஆனால் அவர் நியாயமான முறையில் டிக்கெட் எடுத்து போய் பார்ப்பதில்லை .பிளாக் டிக்கெட் வாங்கி தான் […]

Loading

சிறுகதை

இடைநிறுத்தம்…! – ராஜா செல்லமுத்து

பனி கொட்டும் அந்த இரவு நேரத்தில், ஒரு நகரப் பேருந்து தார்ச்சாலையில் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து ஜன்னல் கண்ணாடிகள் எல்லாம் பனித்துளிகள் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தன. நாகநாதன் டிரைவர். வண்டியை ஓட்டிப் போய்க் கொண்டிருந்தார். யார் எந்த இடத்தில் பேருந்தை நிறுத்தினாலும் உடனே நிறுத்தி விடுவார். இதனால் பயணிகள் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. நாகநாதனை நேரடியாகத் தெரிகிறதோ இல்லையோ? அவரைப் பற்றிய அபிப்பிராயங்கள் மக்கள் மனதில் வேர் ஊன்றியிருந்தது. இப்படி ஒரு […]

Loading

சிறுகதை

பழைய காதல்..! – ராஜா செல்லமுத்து

மனைவி அகிலாவைக் கண்டித்தான் கோகுல். ” நீ என்ன ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடுற? லோகிப்புக்கு கீழே சாரி கட்டுற? பேஸ்புக்ல இருக்க. இன்ஸ்டாகிராம்ல இருக்குற .எப்ப பாத்தாலும் யாருக்காவது போன் பண்ணிட்டே இருக்க. இதெல்லாம் தப்பு . ஒரு குடும்பப் பொண்ணு செய்ற வேலையா இது? அதுவும் எப்பவுமே புரொஃபைல் போட்டோ ரொம்ப அழகா வச்சுக்கிற . நீ இன்னும் குமரின்னு நினைப்பா? நீ எனக்கு பொண்டாட்டி ;அத நெனச்சுக்க. அத விட்டுட்டு இப்பதான் யாரையோ […]

Loading

சிறுகதை

மாற்றத்திற்கான விதை – சுப்ரிஜா சிவக்குமார்

இளமதி அதிர்ச்சி அடைந்தாள். நகர சூழல் பெண்களை முன்னேற்றியிருக்கும் என எண்ணியிருந்தவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. புதிய பணிக்காக தன் சொந்த ஊரை விட்டு நகரத்திற்கு வந்தவள் இளமதி . அது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. இருப்பினும் தான் சிக்குண்டிருந்த சிற்றூர் சமூகச் சூழலிருந்து விடுதலை கிடைக்கப்போகும் எண்ணம் அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அவள் வளர்ந்தது ஒரு நல்ல சூழலை போல் பிறருக்கு தோன்றினாலும் இளமதிக்கு அது உண்மை இல்லையென்று தெரியும். பெண்ணாக பிறந்ததினால் […]

Loading

சிறுகதை

வழி வழியாய் – மு.வெ.சம்பத்

கந்தன் தான் கட்டிய வீட்டில் குடியேறி விளையாட்டாக பத்து வருடங்கள் உருண்டோடி விட்டது. வீட்டைச் சுற்றிலும் தேவையான மரங்களையும் காய்கறிதோட்டங்களையும் பூச்செடிகளையும் அடைசலாக இல்லாமல் தகுந்த இடைவெளியில் விட்டு பயிரிட்டு வளர்த்து வந்தார். மரம் செடி இவைகளின் நடுவில் நல்ல மணற்பாங்கான பகுதி இருக்கும் படி அமைத்திருந்தார். காலையில் மரம் செடி இவைகளுக்கு தண்ணீர் விட கந்தன் தவறுவதில்லை. மகன் பூவரசன் விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவி செய்வான். இவர் வீட்டிற்கு காற்றோட்டமாக இருக்கும்படி மரங்களை வளர்த்தாலும் […]

Loading

சிறுகதை

தடுமாறியது மனம் – ஆர். வசந்தா

விமலா ஒரு சிறிய எளிய குடும்பத்தில் பிறந்தவள். அதுவும் 4 பெண்களுடன் பிறந்தவள். அவளின் தந்தைக்கும் சொற்ப வருமானம் தான். முதல் 3 பெண்களை எப்படியோ திருமணம் செய்த வைத்து விட்டார். கடைக்குட்டி விமலாவையும் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தார். எனினும் எதுவும் கைகூடி வரவில்லை. மிகவும் கவலைப்பட்டு கொண்டிருந்தார். சுகுமார், நல்ல திறமைசாலியான வியாபாரி. பணப்புழக்கம் தாராளமாகவே அவனிடம் இருந்தது. அவனுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. சுமார் 5 […]

Loading

சிறுகதை

பிறந்தநாள் வாழ்த்து..! – ராஜா செல்லமுத்து

“டிசம்பர் இரண்டு நந்துவுக்கு பிறந்த நாள் ” என்று பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் காட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்களோ அத்தனை நண்பர்களும் டிசம்பர் இரண்டு அன்று பிறந்த நாள் கொண்டாடப் போகும் நந்துவுக்கு வாழ்த்துகள் என்று திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டே இருந்தார்கள். நந்து மட்டும் இல்லாமல் அந்தத் தேதியில் யார் யார் பிறந்தார்களோ அத்தனை பேருக்கும் பிறந்தநாள் வாழ்த்து, அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து என்று சிலர் நண்பர்களுக்கு முன்னாடியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதற்கு முன்னால் […]

Loading

சிறுகதை

ஆபத்பாந்தவன்..! – ராஜா செல்லமுத்து

மனிதர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா? அவர்களுக்கு மட்டும்தான் உணர்வு இருக்கிறதா? அவர்கள் மட்டும்தான் நன்றியுடன் இருக்கிறார்களா? மனிதர்கள் மட்டும்தான் மற்றவருடன் பாசமாக இருக்கிறார்களா? என்பதெல்லாம் அந்த நாயைப் பார்த்த பிறகு முத்துவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது .இது நிஜம்தானா? இல்லை கடவுள் இப்படி எல்லாம் உயிர்களைப் படைத்திருக்கிறாரா ? இது என்னால் நம்ப முடியவில்லை? என்று அடிக்கடி தன் நண்பர்களிடம் சொல்லிக் கொள்வார் முத்து. அமைதியாகப் படுத்திருக்கும் நாய் , தன் மகள் நித்யா தனியாகச் […]

Loading

சிறுகதை

திசை மாறிய பயணம்..! – ராஜா செல்லமுத்து

ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் படித்தபோது ஆனந்துடைய ஆளுமை ,திறமை, லட்சியம் எல்லாம் ஒரு சேர இருந்தது. எப்படியும் இந்த பூமியில் பிறந்ததற்கு நாம் ஜெயித்து பெயரை நிலைநாட்டி விட வேண்டும். பள்ளிப் படிப்பில் மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்றெல்லாம் அவன் கற்பனைக் கோட்டைகளைக் கட்டி வைத்திருந்தான். அதுபோலவே தான் அவன் செய்கைகளும் படிப்பும் அவனுடைய நடவடிக்கைகளும் இருந்தன. நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு நிறையப் பேர் இருந்தாலும் யார் நன்றாக படிக்கிறார்களோ ? அவர்களை மட்டும் […]

Loading

சிறுகதை

தெய்வீகக் காதல் நேரம் – ஆர்.வசந்தா

அந்தக் குடும்பத் தலைவி பத்மஜா அம்மா இறக்கும் தருவாயில் உள்ளார் என்று செய்தி வர ஆரம்பித்து விட்டது. உறவினர்களுக்கும் செய்தி சொல்லப்பட்டது. கேள்விப்பட்ட அனைவரும் வர ஆரம்பித்துவிட்டனர். வயதும் 84 ஆகி விட்டது. அருகில் 91 வயது கணவன் வாசுதேவன் கவலையுடன் இருக்கிறார். மகன், மகளுக்கும் போனில் சொல்லி விட்டார்கள். காரியங்கள் வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டது. ஒரு சிறு துடிப்பு இருப்பதாக நம்பப்பட்டது. அனைவரும் அந்த சிறு துடிப்பும் அடங்கக் காத்திருந்தனர். கணவன் வாசுதேவன் ஒரு […]

Loading