சிறுகதை

நூதனச் செயல் – ராஜா செல்லமுத்து

யாருக்கு பணம் தேவைப்பட்டாலும் அவர்கள் கேட்காமலே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவனாக இருந்தான் ஜெயக்குமார் . இதனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஜெயக்குமாரைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள் . பணமெல்லாம் பெரிய விஷயம் இல்லைங்க. மனிதர்கள் தான் முக்கியம் என்று இருக்கின்ற பணத்தை எல்லாம் அத்தனை பேருக்கும் வாரி வழங்கினான் ஜெயக்குமார். சிலர் திருப்பிக் கொடுப்பார்கள். சிலர் கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பார்கள் . தகுந்த நேரத்தில் உதவி செய்ததற்காக நன்றி சொல்வார்கள் . ஆனால் […]

Loading

சிறுகதை

பொறுமை – ராஜா செல்லமுத்து

நான்கு புறமும் வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்லும் சாலைகள் சந்திப்பு நிறுத்தத்தில் இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவர் வலது புறத்திலிருந்து இடது பக்கம் தான் செல்ல வேண்டும் இன்னொருவர் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் திரும்ப வேண்டும். இப்படி எதிரெதிர் திசையில் திரும்ப வேண்டி இருந்ததால் ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொண்டு நின்றார்கள். நான்தான் முதல்ல வந்தேன். நீ எப்படி வண்டியைத் திருப்பலாம்? என்று ஒரு வண்டிக்காரன் எகிற… நான் தான் […]

Loading

சிறுகதை

கடற்கரையில் தமிழ் – ராஜா செல்லமுத்து

மெரினா கடற்கரையின் மணற்பரப்பில் மக்கள் நடந்து செல்லும் இரு பக்கங்களிலும் நிறைய இருந்தன கடைகள். அதில் தமிழ்ப்புத்தகக் கடையை வைத்திருந்தாள் யாழினி. அந்தக் கடையில் நிறையத் தமிழ்ப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதற்கான விளம்பரமோ கடையில் தமிழ் புத்தகங்கள் இருக்கிறது என்றோ அவள் கூவி விற்பதில்லை . மற்ற கடைகளில் எல்லாம் டாட்டூ மருதாணி, டிரஸ் , சாவிக்கொத்துகள், பலகாரம், மீன் என்று வியாபாரம் களை கட்டிக் கொண்டிருந்தது. ஆனால் யாழினி மட்டும் வியாபாரம் செய்யும் மற்ற […]

Loading

சிறுகதை

உணவு ஆர்டர் – ராஜா செல்லமுத்து

எங்கு சென்றாலும் நண்பர்கள் புடை சூழச் செல்வார். சீனிவாசன் மனிதர்களோடு சேர்ந்திருப்பது அவருக்கு மகத்தான மகிழ்வை தருகிறது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். மனுசனத் தவிர இந்த உலகத்துல வேற ஏதும் பெரிய சந்தோஷம் இல்லைங்க என்று வாய்கிழியச் சொல்லும் சீனிவாசன் உணவகத்திற்கு செல்லும் போது மட்டும் வேறு மாதிரியாக திரும்பி விடுவார் . ஒவ்வொரு முறை நண்பர்களோடு உணவகம் செல்லும்போது எல்லோரும் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்பார். நீங்க என்ன சாப்பிடுறீங்களோ அதையே எங்களுக்கும் […]

Loading

சிறுகதை

ஆய்வாளர் எண் – ராஜா செல்லமுத்து

நகரில் திரும்பிய திசை எல்லாம் அந்தப் பகுதி ஆய்வாளரின் எண் அதாவது காவல் துறை ஆய்வாளரின் எண் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இது திருடர்களுக்கும் குற்றம் செய்பவர்களுக்கும் தவறு செய்பவர்களுக்கும் ஒரு பயத்தை ஏற்படுத்தியது. சின்னச் சின்னத் திருட்டு செய்பவர்கள் கூட ஆய்வாளரின் எண் சுவர் முழுதும் எழுதி ஒட்டப்பட்டு இருப்பதை நினைத்து கொஞ்சம் கலக்கமடைந்தார்கள். இனித் திருடினால் இல்லை ஏதாவது ஒரு வீட்டில் அகப்பட்டால் உடனே ஆய்வாளர் எண்ணுக்கு போன் செய்று விஷயத்தை சொல்லி விடுவார்களோ என்ற […]

Loading

சிறுகதை

வானிலை மறந்த வானவில் – ராஜா செல்லமுத்து

அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. எப்படியும் இன்று மழை கொட்டோ கொட்டு என்று கொட்டத்தான் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள் மனிதர்கள். கருமேகங்கள் எல்லாம் திரண்டு ஒரு மேகமாகி உருண்டு உறுமி கொட்டோ கொட்டென்று மழை கொட்டித் தீர்த்தது. தன் இரு சக்கர வாகனத்தில் மழை பொழிய துவங்கும் முன்னே பயணத்தைத் துவக்கி இருந்த மயிலன் . அவன் நெடுஞ்சாலையில் வரும்போது நீர் அபிசேகம் செய்து கொண்டிருந்தது வானம். இடது பக்கம் வலது பக்கம் ஒரு […]

Loading

சிறுகதை

“பட்டபிறகே தெளியும்” – ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான சாலைக்கு சென்று கொண்டிருந்தான் சந்தானம். மிகவும் நெருக்கடியான தெரு என்பதால் இருபுறமும் கடைகள் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற கூட்டம் வலுத்துக் கிடந்தது. சந்தானம் எந்த பொருளை வாங்குவதற்கும் அந்த தெருவுக்குள் நுழையவில்லை. ஒருவரை பார்ப்பதற்காகத்தான் அந்த தெருவழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அந்தத் தெருவை விட்டால் இரண்டு மூன்று கிலோமீட்டர் சுத்தி தான் அவன் சந்திக்கும் நபரை பார்க்க முடியும் என்றிருந்தால் அந்த […]

Loading

சிறுகதை

ஒப்பந்தம் – மு.வெ.சம்பத்

கருணாகரன் ஒன்பதாம் வகுப்பில் பெயில் ஆனதும் தனது படிப்பை நிறுத்திக் கொண்டார். பெற்றோர் எவ்வளவு சொல்லியும் படிப்பைத் தொடரும் நிலையில் அவர் மனம் செல்லவில்லை. வீட்டில் இருந்தால் ஏதாவது சண்டை வருமென நினைத்த அவர் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். வேலையில் நன்கு திறம்பட செய்ததால் நல்ல பெயர் எடுத்தார். இதற்குப் பின் ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்தார். அரசாங்க வேலையில் சேர்ந்தால் நல்லதென நினைத்தார். அவரது பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் ஆலோசனை பெற்று அரசு துப்புரவு […]

Loading

சிறுகதை

மேடு பள்ளம் – ராஜா செல்லமுத்து

நகரில் உள்ள பிரதான தெருக்களெல்லாம் தார் இட்டு சீர்செய்யப்பட்டிருந்தன. ஒரே ஒரு தெரு மட்டும் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக இருந்தது. எத்தனை முறை அரசாங்கம் மறுபடியும் மறுபடியும் சாலைபோட்டாலும் அந்தத் தெரு மட்டும் மறுபடியும் மறுபடியும் மேடுபள்ளமாக இருந்தது. இதை அந்த வழியாக செல்லும் ஒரு இரு சக்கர வாகன ஒட்டி கவனித்தார்கள். அந்தத் தெரு வழி தான் பிரதான சாலைக்கு போக வேண்டும் என்று இருந்ததால் இதை கவனித்த முருகன். எதற்காக இந்த தெருவை […]

Loading

சிறுகதை

கோயில் திருவிழா – ராஜா செல்லமுத்து

புரட்டாசி மாதம் அதிகாலையில் எழுந்து ஆண்டாள் பாசுரங்கள் பாடி திருப்பள்ளி எழுச்சி பாடி பெருமாள் கோவிலில் பூஜை புனஸ்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் எல்லாம் பெருமாள் கோயிலுக்கு தினமும் அதிகாலையிலேயே வந்து கொண்டிருந்தார்கள். அசைவ உணவுகளை அறவே ஒதுக்கிய பக்தர்கள் அந்த மாதம் முழுவதும் பயபக்தியோடு தெய்வீக சிந்தனையோடு வலம் வந்தார்கள் பயபக்தியோடு தினமும் பூஜை செய்தார்கள். திருவிழாவில் தினந்தோறும் கோயிலில் ஏதாவது ஒரு விழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். திருவிழாவில் முதல் […]

Loading