சிறுகதை

சிறப்பு தண்டனை – ராஜா செல்லமுத்து

கோபால் ஒரு நிறுவனத்தின் முதலாளி. அவருக்கு தமிழ்நாட்டில் நிறைய கிளைகள் இருக்கின்றன. ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனம் என்பதால் எப்போதும் அலுவலகம் இயங்கிக் கொண்டே இருக்கும் . கோபால் பணம் படைத்தவராக இருந்தாலும் அவருக்குள் இருக்கும் குணம் மற்றவர்களை முகம் சுளிக்க வைத்தது. நிறுவனத்தில் யாராவது தவறு செய்தால் தவறு செய்பவர்களை அத்தனை பேர் முன்னாலும் பேசி அவமானப்படுத்துவது அவரின் குணமாக இருந்தது. யாராவது அவரைத் தேடி வந்தால் வேண்டுமென்றே பணி புரியும் ஆட்களை தன் இருப்பிடத்திற்கு […]

Loading

சிறுகதை

கழிவறை எண்கள் – ராஜா செல்லமுத்து

புவனேசுவருக்கு இதுவெல்லாம் உண்மையா? என்று விளங்கவில்லை. இப்படியும் நடக்குமா? இது உண்மைதானா? இதற்கு போன் செய்தால் இவர்கள் எழுதி இருப்பதை தருவார்களா? என்று குழம்பி போய் அந்த பொதுக் கழிப்பறையில் நின்று கொண்டிருந்தான். அவன் கழிவறைக்கு தான் சென்றான். ஆனால் அங்கு கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது. இதற்குத் தான் இவர்கள் இங்கு கழிவறைக்கு வருகிறார்களா? இவர்கள் கழிவறைக்குள் அமர்ந்து இவ்வளவு ஓவியங்களையும் இவ்வளவு கதைகளையும் எழுதி வைப்பதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதா? இதை எழுதி […]

Loading

சிறுகதை

போலம்மா – ராஜா செல்லமுத்து

இன்று அதைச் செய்து விடுவது என்று முடிவு செய்தாள் ஜோதி . ஜோதிக்கு அன்று மனம் ரொம்பவே வலித்தது. இதைச் செய்யலாமா வேண்டாமா என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது. ஆனால் செய்துதான் ஆக வேண்டும் என்று அவள் மனது சொன்னது. எவ்வளவு நாளைக்குத்தான் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதிர் வீட்டுக்காரர்கள் என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பது. முடிவு செய்த பிறகு அதை செய்யாமல் இருப்பது அவளுக்கு மன வருத்தத்தை தரும் .அதைவிட அருகில் இருக்கும் வீட்டுக்காரர்களுக்கு […]

Loading

சிறுகதை

போனஸ் – ராஜா செல்லமுத்து

அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் தீபாவளி போனஸ் போட்டாகிவிட்டது . ஆனால் நாராயணனுக்கு மட்டும் போனஸ் வரவே இல்லை .வேலை செய்யும் அத்தனை பேரும் போனஸ் வாங்கிய விஷயத்தை சந்தோஷமாகப் பகிர்ந்துகெண்டார்கள். ஆனால் நாராயணன் தனக்கு போனஸ் தரவில்லை என்று சொன்னால் ஏளனமாக நினைப்பார்கள் என்று அவர் சிரித்தே மழுப்பினார். இதை முதலாளிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று ஒரு பட்டிமன்றம் அவருக்குள் நடந்து கொண்டிருந்தது. அத்தனை பேருக்கும் ரொக்கப் பணம், பட்டாசு, இனிப்பு என்று […]

Loading

சிறுகதை

பொல்லாத ஆசை – ராஜா செல்லமுத்து

ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் காதம்பரிக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது… யாரிடமாவது சொன்னால் கேவலமாகவும் அதே நேரத்தில் கேலியும் செய்வார்கள் என்று மனதுக்குள் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தாள். இந்த வயசுல இது தேவையா? என்பார்கள் என்றும்… தன்னை ஏளனமாக பார்த்து விடக்கூடாது என்பதற்காகவும் எப்போது ஒரு மிடுக்கு நடையோடு நடந்து கொண்டிருப்பாள். 25 வயதில் கணவனை விபத்தில் பலி கொடுத்து விட்டு.. இரண்டு பிள்ளைகளை வளர்த்து.. ஆளாக்கி படிக்க வைத்து.. திருமணமும் செய்து வைத்து.. […]

Loading

சிறுகதை

‘‘சிறுகதை’’-ராஜா செல்லமுத்து

அதுவரையில் கலகலப்பாக வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோ அமுதினி வந்ததும் அமைதியானது. அத்தனை பேரும் இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்? இப்படியுமா இறைவன் படைக்க வேண்டும் ? எது பேசி சிரித்தாலும் இங்கு தவறாகத்தான் இருக்கிகும். அதனால் ஒருவருக்கொருவர் பேசி சிரித்துக் கொண்டிருக்க வில்லை. செல்போனில் படம் பார்த்துக் கொண்டு வந்தார்கள். அமுதினி அந்த ஷேர் ஆட்டோவில் ஏறுவதற்கு கூட ஒருவர் உதவி செய்ய வேண்டி இருந்தது. மேலே ஏறி அவள் சீட்டில் அமர்ந்த போது பிறந்த குழந்தை இருப்பதைப் […]

Loading

சிறுகதை

எல்லோரும் வெற்றி பெறுவோம் – எம்.பாலகிருஷ்ணன்

… மோகனுக்கு அன்றைய நாள் பெரிய திருநாள் போல் இருந்தது. எல்லோரும் அன்று அவனைப் பற்றியே பேசத் தொடங்கினர். அவன் இன்று மாநில அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனையே அவனால் நம்ப முடியவில்லை. கை கால் ஓடவில்லை; பத்திரிக்கையில் செய்தியை பார்த்த உடனே எல்லையில்லா மகிழ்ச்சிகடலில் மூழ்கினான். அவனது பெற்றோர் அவனை உற்சாகத்தில் தூக்கிக் கொண்டாடினர். போனுக்கு மேல் போன்; வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்; அவனுடன் படித்த மாணவர்கள் ஆசிரியர்கள் மனதார வாழ்த்து மழை பொழிந்தனர். […]

Loading

சிறுகதை

வெள்ளம் வருமுன்னே – எம்.பாலகிருஷ்ணன்

“ஏங்க நம்ம மகன் சுரேஷ் போக்கே சரியில்லைங்க. பள்ளிக்கூடத்துக்கே ஓழுங்காப் போகமாட்டேங்கிறான் இப்படியே போனா அவன் படிப்பு என்ன ஆகும்? தன் மகனைப் பற்றி கணவரிடம் வேதனையுடன் சொன்னாள் மனைவி பாக்கியம். “ஆமாம் பாக்கியம் நானும் அவனிடம் பல தடவை அன்பா சொல்லி பாத்துட்டேன். அதட்டியும் சொல்லி பாத்துட்டேன் கேட்க மாட்டேங்கிறான். கண்ட பையன்களோட சேராதடா படிப்பு கெட்டுப் போயிடும்னு எவ்வளவோ சொன்னாலும் காதுல வாங்க மாட்டேங்கிறான் என்று கணவன் முருகனும் புலம்பினார். “அவன் நினைச்சா ஸ்கூலுக்கு […]

Loading

சிறுகதை

பிறந்தநாள் பரிசு – ராஜா செல்லமுத்து

வடிவேல் தன் மகனின் பிறந்த நாளுக்கு நண்பர்கள் சொந்தங்கள் சுற்றும் சூழ அத்தனை பேரையும் கூப்பிட்டு இருந்தான். அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிறந்த நாளைக்கு போய் வரலாம் என்று அத்தனை பேரும் முடிவெடுத்தார்கள். நிச்சயமாக விடுமுறை நாள் என்பதால் நிறைய பேர் வருவார்கள் என்று நினைத்திருந்த வடிவேல் அத்தனை பேருக்கும் உணவைத் தயார் செய்து வைத்திருந்தான். திசைகளிலிருந்து எல்லா மனிதர்களும் வந்து சேர்ந்தார்கள். ஆனால் வந்து சேர்ந்தவர்களுக்கு ஒரு கேள்வி எழுந்தது. பிறந்த நாள், சுப காரியங்களை […]

Loading

சிறுகதை

உழவும் தொழிலும் – ராஜா செல்லமுத்து

படித்து முடித்து வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்த ஐந்து ஆறு இளைஞர்களைப் பார்த்த சங்கருக்கு வருத்தம் மேலிட்டது. இந்தக் காலத்து படிப்பெல்லாம் ஏட்டுச் சுரக்காய்; கறிக்கு உதவாது ; அப்படின்னு சொல்ற மாதிரி இந்த பசங்க எல்லாம் படிச்சிட்டு சும்மா அலையுறானுங்க. படிச்ச படிப்புக்கு வேலை இல்ல. செலவுக்கு கைல காசு இல்ல. கல்யாணம் காட்சி முடிச்சு அந்த வயசுல வாழ வக்கில்ல. என்ன செய்வான். கையில பணம் புரண்டா தான வாழ்க்கையே இனிப்பா இருக்கும். இவனுங்கள சொல்லி […]

Loading