சிறுகதை

பேருந்து நிறுத்தம் – ராஜா செல்லமுத்து

அனல் கக்கும் மதிய வேளையில் பேருந்து நிறைய ஆட்களை ஏற்றிக்கொண்டு தார் சாலை வழியே நகர்ந்து கொண்டிருந்தது ஓர் அரசுப் பேருந்து. செங்கல் சூளைக்குள் இருப்பதாக உணர்ந்த பயணிகள் தங்கள் கைகளில் இருக்கும் கைக்குட்டையைக் கொண்டு முகம் கழுத்தை துடைத்துக் கொண்டார்கள். பெண்கள் தங்கள் முந்தானையில் வடியும் வியர்வையைத் துடைத்துச் சரி செய்து கொண்டார்கள் . சராசரியாக எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று சென்று கொண்டிருந்தது பேருந்து. அக்னி நட்சத்திரம் அப்படின்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன ? […]

Loading

சிறுகதை

பொன்னம்மா – மு.வெ.சம்பத்

பிரகாஷ் தனது தந்தை பார்த்து வந்த தொழிலை நன்றாக மேம்படுத்தி ஒரு நல்ல நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். கார், பங்களா, வேலையாட்கள், சமுதாயத்தில் நல்ல மதிப்பு என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். பிரகாஷுக்கு ஒரே மகன். அவன் பெயர் பிரதீப். அவன் தற்போது டெல்லியில் மத்திய அரசுப் பணியில் பணி புரிகின்றார். பிரகாஷ் தனது தொழிலில் தன்னிடம் வேலை பார்க்கும் நவீனை மிகவும் நம்பி பெரிய பொறுப்புகளைத் தந்தார். நவீனும் பிரகாஷிடம் விசுவாசமாகவே நடந்து கொண்டார். […]

Loading

சிறுகதை

மழை செய்த மாயம்- ராஜா செல்லமுத்து

குருமூர்த்தி,தனலட்சுமி தம்பதிகள் கிராமத்தை விட்டு நகரத்திற்குக் குடிவந்தார்கள். அவ்வளவு செல்வாக்கு இல்லாத குடும்பம் என்பதால் நகரத்தில் வந்ததும் அவர்களுக்கு அடுப்படி ஒரே சிங்கிள் பெட்ரூம் உள்ள வீடு தான் கிடைத்தது. பத்தாவது படிக்கும் மகன் கார்த்திக் ,குருமூர்த்தி மனைவி தனலட்சுமி மகன்,என மூன்று பேர் மட்டுமே இருந்தார்கள். அந்தச் சிறிய அறையில் மூவரும் உடை மாற்றுவது, தூங்குவது சாப்பிடுவது என்று சகல வேலைகளும் அந்த அறைக்குள்ளேயே நிகழ்ந்து கொண்டிருந்தன . ஒரு சில நேரங்களில் மூன்று பேரும் […]

Loading

சிறுகதை

தையல் மிஷின் – ராஜா செல்லமுத்து

பால்பாண்டி ஒரு டெய்லர். தையல் கடை என்று எதுவும் வைக்காமல் தலையிலேயே மிஷினை ஊர் ஊராகத் தூக்கிக் காெண்டு போய் தையல் தைப்பவர். வெயில் காெளுத்தும் இந்தக் காேடை காலத்தில் வியர்க்க வியர்க்க தையல் மிஷினைத் தலையில் தூக்கி வைத்துக் காெண்டு அவர் பாடிவரும் அழகைப் பார்த்து நிறையப் பேர் மெய்மறந்து பால்பாண்டியின் பாட்டைக் கேட்டு நிற்பார்கள். ஐயா எப்படி உங்களுக்கு இப்படி பாட்டு வருது ….ஆத்துல வெள்ளம் பாேறது மாதிரி மடை திறந்த வெள்ளமா பாடுறீங்களே […]

Loading

சிறுகதை

வள்ளலார் வழி – ராஜா செல்லமுத்து

கோவிந்தராஜ் ஒரு அசைவ பிரியர். காலை, மாலை, இரவு என்று எந்த நேரத்திலும் அசைவ உணவு இல்லாமல் அவர் அசைவதே இல்லை. காலை டிபன் சாப்பிடுவதில் கூட சின்னக் கருவாட்டுத் துண்டு இருந்தால் தான் அவருக்கு டிபன் தொண்டைக்குள் இறங்கும். வெள்ளி, செவ்வாய் எல்லாம் அவருக்கு செல்லுபடி ஆகாது. கொல்லாமை பற்றி பேசினால் சிரித்துக் கொண்டே ஏளனம் செய்வார். மனிதர்கள் வாழ்வதற்கு கடவுளால் படைக்கப்பட்ட உணவு பொருட்கள் தான் ஆடு, மாடு, கோழி, மீன் என்று அர்த்தம் […]

Loading