கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிரிவு உபச்சார விழா….! … விழா 15 ராஜா செல்லமுத்து

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள் விழாக்கள்

தீபங்களின் திருவிழா..! – விழா – 14 ராஜா செல்லமுத்து

அன்று, தீபாவளி முதல் நாள் இரவு.பட்… பட்… பட படவென வெடிக்கும் வெடிச் சத்தங்கள். சர் சர்ரென வானில் பறந்து வண்ண வெளிச்சங்களை வானவில்லாய் வரையும் பூந்தொட்டிகள் என்று வெளிச்ச வெடிகளால் நிறைந்திருந்தது, இருண்ட வானம். திரும்பிய திசையெங்கும் வெடிச் சத்தம். வண்ணங்களை அப்பி வானில் வரைந்து சென்றது ஒளிக் கோடுகள். இரவு முழுவதும் தெருவுக்குத் தெரு தீபங்களின் திருவிழாவாக இருந்தது ,அந்தத் தீபாவளி முன் இரவு.லட்சம் வாலா பட்டாசுகள் முதல் பாம்பு மாத்திரைகள் வரை தீபாவளிக்கு […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … அறுவடைத் திருவிழா…! … விழா 13 ராஜா செல்லமுத்து

செங்கமங்கலாக இருந்தது, வானம்.படுக்கையில் இருந்து எழுந்த மூக்கம்மாள், வீட்டின் கடை மடையில் இருந்த பானையில் தண்ணீரை எடுத்து வாயைக் கொப்பளித்தாள். வெற்றிலை போட்டுப் போட்டுக் கரையாய் போன தன் பற்களை எவ்வளவு நாள் பல் தேய்த்தும் அந்தச் சிவப்புக் கறை அவள் பற்களை விட்டு தீர்ந்தபாடில்லை என்ற வருத்தத்தில் வீட்டு முற்றத்தில் வளர்ந்திருந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த எரிந்த வறட்டிச் சாம்பலை தன் இடது கையில் கொட்டி, வலது ஆட்காட்டி விரலில் தொட்டு விருட்டு, விருட்டு என்று பல் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … நவராத்திரி விழா ….! …. விழா – 12 ராஜா செல்லமுத்து

அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பரிசளிப்பு விழா…! – விழா 11 ராஜா செல்லமுத்து

உயர்ந்து வளர்ந்த அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அது அந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவைப் போலவே இருக்கும்.வருடம் முழுவதும் ஓடியாடி வேலை செய்த ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அந்த விழாவில் நிறுவனத்தில் திறமையாகப் பணிபுரிபவர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள். வெளியில் இருந்து நிறுவனத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் என்று அத்தனை பேரையும் தேர்வு செய்து பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … புதுமனைப் புகுவிழா ….! விழா 10 …. ராஜா செல்லமுத்து

அத்தனை அழகோடு இருந்தது அந்தப் புதுவீடு. சுற்றிலும் தென்னை மரங்கள். இயற்கை சூழ்ந்த அந்தப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டி இருந்தார் வீரமணி. அவருக்கு நிறைய வீடுகள் இருந்தாலும் இந்த வீடு அத்தனை அறைகள் கொண்ட மிகப்பெரிய வீடாக இருந்தது. அந்தப் பிரம்மாண்டமான வீட்டிற்குப் புதுமனைப் புகுவிழா அன்று நடந்து கொண்டிருந்தது. அழகான வண்ணங்கள் பூசப்பட்ட சுவர்கள் . அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஜன்னல்கள் என்று புத்தம் புதிதாக இருந்தது , அந்த வீடு. வீட்டின் […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … வளைகாப்பு விழா..! …. ராஜா செல்லமுத்து

வளைகாப்பு விழா நடந்த அந்த இரவு களைத்துப் போய் படுக்கையில் விழுந்தாள், பாரிஜாதம். ” சரி , அவள எதுவும் தொந்தரவு பண்ணாதீங்க. ரொம்ப டயர்டா இருப்பா . ஏதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்” என்று அப்பா தெய்வநாயகம் சொல்ல , “சரி “ என்றாள், தெய்வநாயகம் மனைவி கோதை. வளைகாப்பு விழா முடிந்த இரவு பாரிஜாதத்தைத் தனியாக விட்டு சென்றிருந்தான், அவளின் கணவன் குமரன். ” வாயும் வயிறுமா இருக்கிற புள்ள தனியா படுத்திருக்கிறா, ஒரு […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கறி விருந்து விழா 8 …! …. ராஜா செல்லமுத்து …

சின்னச்சாமி கொடுத்துப் போன பத்திரிகையை வீசி எறிந்தார் பெருமாள். தூரப் போய் விழுந்த பத்திரிகையைத் தேடி எடுத்து பெருமாளிடமே கொண்டு வந்து கொடுத்தாள் மனைவி அலமேலு. ” ஒரு பெரிய மனுசன் கறி விருந்து வச்சிருக்கோம்னு பத்திரிகை குடுத்திட்டு போயிருக்காரு. அதப் போயி இப்படி தூக்கி எறியிறீங்களே?.இது தப்பு இல்லையா? இது அந்த பெரிய மனுசனுக்கு செய்ற துரோகம் இல்லையா ?” என்று கணவன் பெருமாளிடமே வாதாடினாள் அலமேலு. ” எது துரோகம். அவர் செஞ்சது தப்பு […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … திருமண விழா 7..! …. ராஜா செல்லமுத்து

விடிந்தும் விடியாததுமாய் பத்திரிகைப் பையை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினார் அழகப்பன். ‘ இன்னைக்கு எல்லாருக்கும் பத்திரிகை குடுத்து முடிச்சா தான் நாள் சரியா இருக்கும். இல்ல கடைசி நேரத்தில நாம தான் கஷ்டப்படணும் ‘ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு வேகமாக நடந்தார் அழகப்பன். ” என்ன அழகப்பா , எங்கேயோ கிளம்பிட்டீங்க போல? “ என்று ராசுவின் குரல் கொடுக்க ” பத்திரிகை குடுக்க. எம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்ல. அதான், சரி…உனக்கு […]

Loading

அறைகள் சொல்லும் கதைகள் கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பட்டமளிப்பு விழா….! – 5 … ராஜா செல்லமுத்து

தன் மகன் வினோத் முதன்முதலாகப் பட்டம் வாங்க போகிறான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார், சந்தியப்பன்.வீட்டில் முதல் பட்டதாரி என்பதால் சந்தியப்பனுக்கு அவ்வளவு சந்தோஷம். தான் படிக்கவில்லை என்றாலும் தன் மகனாவது படித்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறான், படிக்காத குடும்பத்திலிருந்து முதல் பட்டம் வாங்க போகிறான் என்று சந்தியப்பனும் அவன் மனைவி இருளாயியும் ரொம்பவே சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள் . “என்ன வினோத் கிளம்பியாச்சா? “ என்று அம்மா வினோத்தைக் கேட்க ” இந்தா ….இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பிருவேன்மா. […]

Loading