செய்திகள்

மும்பையில் 30 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு: 12 பேர் உயிரிழப்பு

மும்பை, நவ.24– மும்பை நகரில் புதிதாக 30 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 12 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இதன்படி, புதிதாக 30 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் 156 பேருக்கு புதிதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன […]

Loading

செய்திகள்

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க போலீஸ் மீதே வழக்கு தொடுப்பதா?

மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதித்த நீதிபதி சென்னை, நவ. 24– சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் ஏழு பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த கலா மற்றும் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Loading

செய்திகள்

தேர்தல் ஆணையரை ஒரே நாளில் நியமித்தது எப்படி?: சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி

5 நாளில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு டெல்லி, நவ. 24– தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்தி வைத்தது. தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி […]

Loading

செய்திகள்

மேகாலயா – அசாம் எல்லையில் ஏற்பட்ட வன்முறை: 5 பேர் பலி

இணைய சேவை ரத்து; வேறு மாநில வாகனங்களுக்கு தடை சில்லாங், நவ. 23– மேகாலயா – அசாம் எல்லையில் போலீசாருடன் நடந்த மோதலில் மேகாலயாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இணைய சேவை ரத்து செய்யப்பட்டதுடன், வேறு மாநில வாகனங்கள் மேகாலயா-வுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் அசாம் எல்லையையொட்டி உள்ள மேற்கு ஜெய்ன்டியா மாவட்டத்தில் லாரியில் மரம் கடத்துவதாகக் கூறி, அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக […]

Loading

செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி, நவ. 23– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,046 ஆக பதிவாகியுள்ளது. மொத்த […]

Loading

செய்திகள்

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

சென்னை, நவ. 23– தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தி.மு.க.வின் இளைஞர் அணிச் செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சாரக்குழு செயலாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக்குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், துணைச் செயலாளர்களாக ஜோயல் உள்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி […]

Loading

செய்திகள்

142 பேரை பலி வாங்கிய குஜராத் பால விபத்து: ஒரே நாளில் 3165 டிக்கெட்டு விற்றது விசாரணை அறிக்கையில் தகவல்

காந்தி நகர், நவ. 23– குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளான நாளன்று, 3,165 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட தகவல் தடயவியல் விசாரணையில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆற்றுக்குள் மூழ்கினர். இதில் 142 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். […]

Loading

செய்திகள்

நியூசிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18 இல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு

வெலிங்டன், நவ. 23– நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்,” என, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்து உள்ளார். தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயது, 18 ஆக இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் வயது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களை […]

Loading

செய்திகள்

மசாஜ் சர்ச்சையை தொடர்ந்து திகார் சிறையில் ஓட்டல் உணவை ருசி பார்க்கும் ஆம் ஆத்மி அமைச்சர்

புதுடெல்லி, நவ.23– திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பேசப்பட்ட நிலையில், தற்போது அவர் அங்கு ஓட்டல் உணவுகளை சாப்பிட்டு மகிழும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த 2015-16 ஆண்டுகளில் தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் வாயிலாக ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் […]

Loading

செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று தொடக்கம்

போபால், நவ. 23– மத்திய பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் 11 நாட்கள் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி இன்று தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை தொடர்ந்து, தற்போது குஜராத்தில் ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொண்டு வந்தார். 7 மாவட்டங்களில் […]

Loading