செய்திகள்

தூத்துக்குடியில் எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு

தூத்துக்குடி, ஜன. 22– எலி மருந்து பாக்கெட் கிடந்த தண்ணீரை குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு வடக்கு ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜன். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் விக்னேஷ் (வயது 13), பக்கத்து ஊரான விஜயராமபுரம் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு மாலையில் […]

Loading

செய்திகள்

கும்பாபிஷேக நேரலைக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட்

சென்னை, ஜன. 22– அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின் நீதிபதி கூறியதாவது:- ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை. அறநிலையத்துறையின் கீழ் உள்ள […]

Loading

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்

வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிப்போம்: மாநாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை சேலம், ஜன.22- நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்போம் என்று சேலம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். சேலத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- ராமேசுவரத்தில் ஒருவர் (பிரதமர் மோடி) இருக்கிறார். 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாதசுவாமியை நோக்கி பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார். […]

Loading

செய்திகள்

ஜன.22–தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை, ஜன.22– தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.46 ஆயிரத்து 640–-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

‘பெரிய வளையம்’: பிரபஞ்சத்தின் புது சவால்

தலையங்கம் விஞ்ஞானம் வளர புரிதல் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் முழுமையாக தெளிதல் ஏற்படுகிறதா? இதற்கான விடைத் தேடல் மனிதகுலத்திற்கு இறுதி நொடி வரை தொடரும் என்பது தான் உண்மை! அறிவியல் என்பது இயற்கையை அறிந்து தெளிவு ஏற்படுத்துவது என்று புரிந்தாலும், அறிவியல் வரையறுக்கப்பட்ட உண்மை அதாவது மாறாதது, மாறக்கூடாது என்றும் தோன்றுகிறது. அதற்கு நல்ல உதாரணம் புவிஈர்ப்பு சக்தி. அண்டசரசாரத்தில் எல்லா நிலப்பரப்புகளிலும், Mass அதாவது நிறை துகள்கள் இருந்தால் அதற்குள் மின் சக்தியும் இருக்கும். அப்படி என்றால் […]

Loading

செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

டெல்லி, ஜன. 20– ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்டக்குழுவின் தலைவரான முன்னாள் குடியரசு தலைவலர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் […]

Loading

செய்திகள்

ஜப்பான் விண்கலம் நிலவில் தரை இறங்கியது: வேகமாக சக்தியை இழந்து வரும் லேண்டர்

டோக்கியோ, ஜன. 20– நிலவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம், வேகமாக தனது சக்தியை இழந்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளை பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளே வெற்றியும் பெற்று இருக்கின்றன. இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. துல்லிய தரை இறக்கம் […]

Loading

செய்திகள்

பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது: காசா போர் குறித்து அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

டெல் அவிவ், ஜன. 20– காசா போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில், நிலையான தீர்வு தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய காசா – இஸ்ரேல் மோதல், தற்போது வரை தொடர்ந்து வருகிறது. “காசா தாக்குதல் வெறும் ஆரம்பம்தான் இனி நடப்பதை என்னால் கூட கணித்துச் சொல்ல முடியாது” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]

Loading

செய்திகள்

பேராவூரணி அருகே இன்று காலை கார் விபத்து: 4 பேர் பலி; 7 பேர் காயம்

பேராவூரணி, ஜன. 20– பேராவூரணி அருகே சாலையோரம் இருந்த தடுப்பில் இன்று காலை கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மரியசெல்வராஜ் (வயது 37), இவரது மனைவி பத்மாமேரி (வயது 31), இவரது மகன் சந்தோஷ் செல்வம் (வயது 7)அதேப் பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் (வயது 53), சரஸ்வதி (வயது 50), கணபதி (வயது 52), லதா(வயது 40), ராணி (வயது 40), […]

Loading

செய்திகள்

20 கிலோ பார்லேஜி பிஸ்கட்டில் இளைஞர் கட்டிய ராமர் கோயில்

கொல்கத்தா, ஜன. 19– 20 கிலோ பார்லேஜி பிஸ்கெட்டில் 4 அடி உயரத்தில் எழிலான ராமர் கோயிலை கட்டி அசத்தியுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தியில் கட்டப்பட்டிருந்த 450 ஆண்டுகால பழமையான பாபர் மசூதி இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அதில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டவும், அதற்கு ஈடாக அருகில் பாபர் மசூதி கட்ட இடம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒரு […]

Loading