செய்திகள்

மத அரசியலா, மனித அரசியலா? ஒரு கை பார்ப்போம்: உதயநிதி ஸ்டாலின் சபதம்

சென்னை, ஜன. 23– மத அரசியலா, மனித அரசியலா? மனு நீதியா? சமூக நீதியா? மாநில உரிமையா? பாசிச அடக்குமுறையா? என ஒரு கை பார்த்துவிடுவோம் என்றும் இந்தியா கூட்டணியின் வெற்றியை நமது தலைவர் ஸ்டாலினின் கரங்களில் சேர்ப்போம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று முன்தினம் திமுகவின் இளைஞரணி 2 வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். உலகிலேயே […]

Loading

செய்திகள்

கிருமிநாசினி ஜவுளிகளை வெற்றிகரமாக தயாரித்து ஏற்றுமதி விற்பனை செய்து திருப்பூர் டாக்டர் சுதா சாதனை

அறிவியல் அறிவோம் கிருமிநாசினி ஜவுளிகளை வெற்றிகரமாக தயாரித்து விற்பனை செய்து திருப்பூர் டாக்டர் சுதாசாதனை படைத்து வருகிறார் திருப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் சுதா. மருத்துவம் படித்து முடித்து மருத்துவராக பணி புரிந்த இவர், தற்போது பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கும் கிருமிநாசினி ஜவுளிகளை தயாரிக்கும் சுவாஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மருத்துவம் படித்தவரான சுதா வெற்றிகரமான தொழில்முனைவோராகி பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பை வழங்கி வரும் ‘சுவாஸ்’ ஜவுளி நிறுவனத்தை நடத்தி வருகிறார். கிருமிநாசினி […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 236 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் ஒருவருக்கு தொற்று டெல்லி, ஜன. 23– இந்தியாவில் புதிதாக 236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2031 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 203 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் […]

Loading

செய்திகள்

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் காஞ்சி சங்கராசாரியார் தரிசனம்

காஞ்சிபுரம், ஜன. 23– காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று அயோத்தி சென்று ஸ்ரீ ராமர் சிலைக்கு பூஜைகள் செய்து திரும்பியதாக ஸ்ரீமடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:– காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஐதராபாதில் முகாமிட்டுள்ளார். அங்கு அவர் தினமும் செய்யும் சந்திரமெளலீசுவரர் பூஜையை நிறைவு செய்த பின்னர், தனி விமானம் மூலம் நேற்று அயோத்திக்குச் சென்று அங்குள்ள சங்கர […]

Loading

செய்திகள்

குடியரசு தின விழா: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, ஜன. 23– குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நாடு முழுவதும குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், […]

Loading

செய்திகள்

சாலை பாதுகாப்பில் நடைபாதைகளின் அவசியத்தை மறக்கலாமா?

ஆர். முத்துக்குமார் சாலை விபத்துக்கள் நம் நாட்டில் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் மற்றும் சட்டத்துறைக்குமே மிகப்பெரிய சவாலாகவே இருக்கிறது. அடிப்படையில் சாலை விபத்துக்களின் பின்னணியில் சாலை விதிகளை மதிக்காது உபயோகிப்பது தான் அதிமுக்கிய காரணம்! கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனங்கள் அனுதினமும் காலை 6.30 மணிக்கே பரபரப்பாக இயங்க துவங்கி விடும். அங்குள்ள மசூதியில் இருந்து ஆற்காடு பிரதான சாலை வர மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் காரணமாக சர்க்குலர் சாலை […]

Loading

செய்திகள்

டெல்லியில் இருந்து மேகாலயா ஆளப்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

சில்லாங், ஜன. 23– மேகாலயா மாநிலம் டெல்லியில் இருந்து ஆளப்படுகிறது என, ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய ஒற்றுமை நீதி பயணம்’ கடந்த ஜனவரி14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்தப் பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணம் மார்ச் 20-ம் […]

Loading

செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: 31 பேரின் டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் மீண்டும் பின்னடைவு புதுக்கோட்டை, ஜன. 23– வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டிஎன்ஏ மாதிரி ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. தனிப்படை […]

Loading

செய்திகள்

392 தூண்கள், 44 கதவுகள், 5 மண்டபங்கள் அயோத்தி ராமர் கோவில் கட்டமைப்பின் சிறப்பம்சங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே ஜொலித்தது. இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:–அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலானது பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. அதன் நீளம் 380 அடி (கிழக்கு–மேற்கு), உயரம் 161 அடி கொண்டதாகும். ராமர் கோயிலானது மூன்று அடுக்குகளைக் கொண்டது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம். இதில் மொத்தம் 392 தூண்களும், 44 […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள்: பட்டியலை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்

சென்னை, ஜன. 22– நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.14 கோடி பெண்கள், 3.03 கோடி ஆண்கள் ஆகும். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள […]

Loading