செய்திகள்

வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பை தவற விட்ட காங்கிரஸ்

25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன்: பிரதமர் மோடி பெருமிதம் கயா, ஏப்.16– நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். பிகார் மாநிலம் கயாவில் இன்று நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:– இந்த தேர்தலானது ‛வளர்ந்த இந்தியா’வுக்காகவும், பீகாரின் வளர்ச்சிக்காகவும் நடக்கிறது. நமது அரசியல்சாசனம் தூய்மையானது. சாசனத்தை உருவாக்கியவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியா […]

Loading

செய்திகள்

ஆபாசம், குழந்தைகள் பாலியல் சுரண்டல் காரணங்களால் டுவிட்டரில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்கு நீக்கம்

நியூயார்க், ஏப். 16– குழந்தைகளின் பாலியல் சுரண்டல் உள்ளிட்ட காரணங்களால், டுவிட்டரில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கபட்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியது முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்குறைப்பு, பெயர் மாற்றம், மாதச் சந்தா என தினம் தினம் புதுப்புது அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அதிரடியாக எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் […]

Loading

செய்திகள்

மோடி கொடுப்பது போலி கியாரண்டி; காங்கிரஸ் அளிப்பது பக்கா கியாரண்டி

புதுச்சேரியில் மல்லிகார்ஜூன கார்கே பேச்சு புதுச்சேரி, ஏப். 16– மோடி கொடுப்பது நோ கேரண்டி; போலி கியாரண்டிகள்தான். ஆனால், காங்கிரஸ் அளிப்பது பக்கா கியாரண்டி என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:– பாஜக அரசு பல மாநிலங்களில் குறுக்கு வழியில் எம்எல்ஏக்களை மிரட்டி ஆட்சியை கைப்பற்றி […]

Loading

செய்திகள்

கூடங்குளத்தில் 79 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது

நெல்லை, ஏப். 16– கூடங்குளத்தில் 79 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது. சுமார் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை […]

Loading

செய்திகள்

சல்மான் கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் குஜராத்தில் கைது

மும்பை, ஏப். 16– நடிகர் சல்மான்கான் வீட்டு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் சல்மான் கான் வீடு உள்ளது. இந்நிலையில், நடிகர் சல்மான்கானின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மும்பை போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரை குஜராத்தில் கைது செய்தனர். நடிகர் சல்மான் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை நிதியில் வஞ்சித்து விட்டு பகல் வேசம் போட்டு வருகிறார் மோடி

ஆதாரங்களுடன் செல்வப்பெருந்தகை சாடல் சென்னை, ஏப். 16– தமிழ்நாட்டை, தமிழ்மொழியை வஞ்சித்துவிட்டு, நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மோடி என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டை புகலிடமாக கருதி பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள 9 வது முறையாக வருகை புரிந்திருக்கிறார். ஆனால், 100 முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

‘அக்கா 1825″ தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை, ஏப்.16– தென்சென்னை மக்களவைத் தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ‘அக்கா 1825’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாள்தோறும் மக்கள் பணி என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு 365 நாட்கள் என்று கணக்கிட்டு 1825 நாட்களும் மக்கள் பணியாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன் இந்த தேர்தல் அறிக்கையை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து நெரிசல் போன்ற தென் சென்னையின் முக்கிய பிரச்னைகள் குறித்து அலசி, அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் அதில் […]

Loading

செய்திகள்

தேர்தல் முடிந்ததும் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை: உதயநிதி ஸ்டாலின் உறுதி

ஊட்டியில் ஆ.ராசாவை ஆதரித்து பிரச்சாரம் ஊட்டி, ஏப்.16-– பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.35 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தேர்தல் முடிந்ததும் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஊட்டியில் திறந்தவேனில் இருந்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:–- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தளபதியாக மட்டும் அல்ல, எனக்கு அரசியல் வழிகாட்டியாக ஆ.ராசா […]

Loading

செய்திகள்

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை, ஏப். 16– நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6ம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் என்றும் வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை […]

Loading

செய்திகள்

நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு: சத்ய பிரதா சாகு

சென்னை, ஏப். 16– தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், தலைமைத் […]

Loading