செய்திகள்

பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாார்

நடிகர் நிவின் பாலி திருவனந்தபுரம், செப். 4– தன் மீதான பாலியல் புகார் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன்” என்று நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை அண்மையில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இதன் அடிப்படையில் மலையாள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறை வழக்குப் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழக வர்த்தக வளர்ச்சிக்கு வேகம் தரும் வந்தே பாரத் ரயில்

தலையங்கம் தமிழகத்தில் சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் தருகிறது சமீபத்தில் அறிமுகமான வந்தே பாரத் ரெயில் சேவைகள். கடந்த மாதம், சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை சிறிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளையும், முக்கியமான நகரங்களையும் இணைத்து, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது. கோவில்பட்டி, தனித்துவமான வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சுவையான கடலை மிட்டாய் தயாரிப்புகளால் பெயர் பகுதி, […]

Loading

செய்திகள்

காவல்துறை எழுப்பிய கேள்விக்கு நாளை பதில்: விஜய் கட்சி அறிவிப்பு

சென்னை, செப். 3– மாநாடு நடத்துவது குறித்து காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய […]

Loading

செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே 60 அடி தூரத்துக்கு உள்வாங்கிய கடல்

ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் பக்தர்கள் பீதி திருச்செந்தூர், செப். 3– திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே, 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால், பக்தர்கள் பீதி அடைந்தனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு முருகனை தரிசனம் செய்கின்றனர். 60 அடி உள்வாங்கிய கடல் நேற்று திருச்செந்தூரில் […]

Loading

செய்திகள்

பாரா ஒலிம்பிக்- பதக்கம் வென்ற துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ், நித்யஸ்ரீ சிவன்: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, செப்.3– பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– பாராலிம்பிக்ஸ் 2024-–ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பும், எதிலிருந்தும் மீண்டு வரும் பண்பும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்கமாக அமைந்துள்ளது. உங்கள் வெற்றியில் பெருமை கொள்கிறோம். வெண்கலம் வெண்கலப் […]

Loading

செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது

கிருஷ்ணகிரி, செப். 3– மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கதில் மேலும் ஒரு பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்.சி.சி. முகாம் கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடந்தது. அந்த முகாமில் 8-ம் வகுப்பு மாணவி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக […]

Loading

செய்திகள்

நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு: சிங்கமுத்துவுக்கு கால அவகாசம்

சென்னை, செப். 3– நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில் சிங்கமுத்துவுக்கு கால அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் ஆரம்பக் காலத்தில் ஒன்றாக இணைந்தது படங்களில் நடித்திருந்தாலும், இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்கள். இருப்பினும், வடிவேலு குறித்து நடிகர் சிங்கமுத்து பேட்டிகளில் கலந்துகொள்ளும்போது அவதூற்றைப் பரப்பும் வகையில் பேசிக்கொண்டு இருந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பேட்டியில் […]

Loading

செய்திகள்

வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: ஆய்வு நிறுவனம் தகவல்

திருவனந்தபுரம், செப். 3– வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு அருகில் உள்ள மூன்று மலை கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகினர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர் என்பதை அறிவோம். நிலச்சரிவுக்கு வாய்ப்பு இந்த நிலையில் வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு […]

Loading

செய்திகள்

மாநில பாடத்திட்ட தரம் குறைவா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

சென்னை, செப். 3– “ஒன்றிய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது” என்று பேசி சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களிடம் பரிசோதிக்கட்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி தந்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார்ப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில், மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக இருக்கிறது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்குச் […]

Loading

செய்திகள்

12 ஆண்டுகளாக ஒரு நாளில் 1/2 மணி நேரம் மட்டுமே தூங்கும் ஜப்பான்காரர்

டோக்கியோ, செப். 3– 12 ஆண்டுகளாக நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் ஜப்பானிய மனிதரின் செய்தி, அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மனிதனுக்கு ஆரோக்கியமாக வாழ குறைந்தது 6 மணிநேரத்திலிருந்து 8 மணி நேர தூக்கம் மிகவும் அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தேவையான தூக்கத்தை நாம் தர மறுத்தால் மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி கடுமையான தாக்கத்தை மனிதன் சந்திப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒரு மனிதர் 12 ஆண்டுகளாக […]

Loading