செய்திகள்

மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் என்பதை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தக்கூடாது: ஸ்டாலின்

சென்னை, ஏப்.10– ஒன்றுபட்ட இந்தியாவிற்காக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் இப்போதைய நிலையே தொடர வேண்டும் என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான கட்டுரை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி. தாதார் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் முக்கியமானதொரு கட்டுரையை இன்று எழுதியுள்ளார். வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே மக்கள்தொகையில் சமமின்மை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை […]

Loading

செய்திகள்

நானே பா.ம.க. தலைவர்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

செயல் தலைவராக அன்புமணி நியமனம் விழுப்புரம், ஏப். 10– பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் பேசியதாவது:– பா.ம.க. நிறுவனரான நான் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை. பதவி பெறும் ஆசையும் எனக்கு இல்லை. 2026-ம் ஆண்டு […]

Loading

செய்திகள்

பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் பலி

முதல்வர் நிதிஷ் குமார் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் பாட்னா, ஏப். 10– பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலா ரூ.4 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்துள்ளார். பீகாரில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் நேற்று பல்வேறு இடங்களில் இடி, […]

Loading

செய்திகள்

நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு சென்னை, ஏப்.10-– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடந்தது. ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர வேண்டும் என இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் பரந்தாமன், எழிலன்; காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் குமார்; விடுதலைச்சிறுத்தைகள் […]

Loading

செய்திகள்

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.68,400க்கு விற்பனை

சென்னை, ஏப். 10 சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து, ரூ.68,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தங்கம் விலை கடந்த […]

Loading

செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பரவும் புதுவகை நிமோனியா காய்ச்சல்

நியூசவுத்வேல்ஸ், ஏப் 10– ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் நிமோனியா வகை நோய் பரவுவதாக அந்நாட்டு அரசு, அவசரநிலையை அறிவித்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மார்ச் 30ந் தேதி முதல் ஏப்ரல் 4ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

ராஜஸ்தானை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்து குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடம்

ஆமதாபாத், ஏப். 10– ராஜஸ்தானை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற 23-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. […]

Loading

செய்திகள்

சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு

சென்னை, ஏப். 10– 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டகிராம் பயன்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமாக உள்ள ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைதளங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு கட்டுப்பாடு அதன்படி பெற்றோர்கள் தங்களின் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்குகளை […]

Loading

செய்திகள்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்த்தின் கீழ் 30,236 வீடுகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் பெரியசாமி ஆய்வுக் கூட்டத்தில் தகவல் சென்னை, ஏப் 10– ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகம், பனகல் மாளிகை கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் அறிவிப்புகளின் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக குடியிருப்புகள் புதுப்பிக்கும் திட்டம் குறித்து விரிவான ஆய்வினை […]

Loading

செய்திகள்

இரவுநேர கேளிக்கை விடுதி விபத்து: பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு

சான்டோ டோமினிக்கோ, ஏப். 10– டொமினிகன் ரிபப்ளிக்கில் இரவுநேர கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ள. கரீபியன் தீவு நாடான டொமினிகன் ரிபப்ளிக் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 முதல் 1,000 பேர் கலந்துகொண்டதாக […]

Loading