செய்திகள்

தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம்

சென்னை, அக்.4- தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம் செய்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 மருத்துவக் கல்லூரிகளில் டீன் பணியிடங்கள் காலியாகவே இருந்து வந்தன. அந்த பதவியிடங்களில் பொறுப்பு டீன்களே பணியாற்றி கொண்டிருந்தனர். இந்தநிலையில் அந்த 14 பணியிடங்களுக்கும் புதிய டீன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:- […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இஸ்ரேலிய தாக்குதலின் பின்னனியில் அமெரிக்க சதி

ஆர் முத்துக்குமார் தெற்கு லெபனானில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் (IDF- ஐடிஎப்) தங்களது சமூக வளைதளப் பக்கத்தில் அதை உறுதி செய்யும் அறிக்கையையும் வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், “நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைப்போம். இந்த இராணுவ நடவடிக்கை வரம்புக்குட்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” “இங்கிருந்து தான், வடக்கு இஸ்ரேலின் எல்லையில் வசிக்கும் மக்களை ஹெஸ்பொலா தாக்குகிறது. […]

Loading

செய்திகள்

ஹிஸ்புல்லா அமைப்பின் பதிலடி : 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி

லெபனான், அக்.03– லெபனான், ஈரான், பாலஸ்தீனம் என அண்டை நாடுகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இரான் மீது இஸ்ரேல் 4 வாரங்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் நேற்று முன்தினம் இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் […]

Loading

செய்திகள்

16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: துணை முதல்வரின் செயலராக பிரதீப் யாதவ் நியமனம்

சென்னை, அக்.3- தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இதன்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனிச்செயலாளராக பிரதீப் யாதவ்வும், வருவாய் நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது:- கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். உயர்கல்வித் துறை கூடுதல் தலைமைச் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் 40 % அதிகரிப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, அக்.3- கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் நேற்று பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- நிலையான மற்றும் அமைதியான உலகை வளர்ப்பதற்கு, காந்தியின் காலத்தால் அழியாத கொள்கைகள் இன்று மிகவும் முக்கியமானவை. கடைசி மனிதனை நாம் உயர்த்தாதவரை, காந்தியின் நோக்கம் நிறைவேறாது. தமிழ்நாட்டில் சமூகநீதி என்ற சத்தம் பரவலாக இருந்தாலும், நமது ஆதிதிராவிட […]

Loading

செய்திகள்

அதிமுகவுக்கு அழைப்பு ஏன்? மது ஒழிப்பு மாநாட்டில் திருமாவளவன் விளக்கம்

சென்னை, அக். 03– மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது ஏன் என்றும் மதுவிலக்கை தமிழ்நாட்டில் தள்ளி வைத்தது யார் என்பது குறித்தும் திருமாவளவன் மாநாட்டில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் அதிகம் எதிர்நோக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விசிக மகளிரணி சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டனர். விசிக தலைவர் திருமாவளவன் […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, அக். 3– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் பிடிக்கச்சென்ற போலீசாரை […]

Loading

செய்திகள்

கனிமொழி எம்பியின் பெயரை தவறாக பயன்படுத்தினேன்: வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கோரிய போதைஇளைஞர்

கோவை, அக். 03– நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு போதை இளைஞர் மன்னிப்புக் கோரி உள்ளனர். கோவையில் 1 ந்தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களிடம் நான் கனிமொழி எம்.பி. உதவியாளரின் தம்பி என்று கூறியுள்ளார். இது தொடர்பான காணொலி வெளியாகி வைரலானது. இதனையடுத்து, அந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். தப்பிக்க செய்த தவறு விசாரணையில், அவர் காவல்துறையினரிடமிருந்து […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் திடீர் ராஜினாமா

லாகூர், அக். 2– பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பை பாபர் அஸம் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு புதிய கேப்டன் தலைமையில் பாகிஸ்தான் அணி களம் காண வேண்டியுள்ளது. தனது முடிவை செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தார் பாபர் அஸம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அந்த அணியின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை தொடர்கிறது. உள்நாடு […]

Loading

செய்திகள்

டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி

புதுடெல்லி, அக்.2– பள்ளி மாணவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி இன்று தூய்மைப் பணிகளை மேற்கொண்டார் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டார். இதற்கான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்து […]

Loading