செய்திகள்

‘புரட்சிச்சுடர்’ வீரபாண்டிய கட்டபொம்மன்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, அக்.16– புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2 மாநில சட்டமன்ற தேர்தல் தரும் பாடம்

தலையங்கம் அண்மையில் வெளிவந்த அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் முக்கிய அரசியல் பரிமாணங்களையும், மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. பாரதீய ஜனதா கட்சிக்கு (பாஜக) அரியானாவில் வெற்றி மிக முக்கியமானது. தேர்தலுக்கு முன் வெளிவந்த கருத்துக் கணிப்புகளை தாண்டி, மூன்றாவது முறை தொடர்ந்து வெற்றியை பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபணமாகி […]

Loading

செய்திகள்

தொழில் முனைவோர் – புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயிற்சி வகுப்புகள்

இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் சென்னை, அக். 15– சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 மண்டலங்களில் கண்காணிப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம்

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் சென்னை, அக்.15-– வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- திருவொற்றியூர் -– ஜி.எஸ்.சமீரன் […]

Loading

செய்திகள்

சிகரெட் லைட்டர் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை, அக். 15– சிகரெட் லைட்டர் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லவா? குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய – 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். […]

Loading

செய்திகள்

ரெயில் சேவை குறித்த தகவலுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை, அக். 15– சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களின் சேவையில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், ரெயில் சேவை குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 044–25330952, 044–25330953 ஆகிய உதவி […]

Loading

செய்திகள்

பாலங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் இல்லை

தாம்பரம் மாநகர போலீஸ் அறிவிப்பு சென்னை, அக். 15– பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். சென்னைவாசிகள், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் இம்முறை அவ்வாறு ஒரு சூழல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு […]

Loading

செய்திகள்

21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் இல்லை

சென்னை, அக். 15- நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. அந்த சுரங்கப்பாதைகள் விவரம் வருமாறு; கத்திவாக்கம், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, கணேசபுரம், எம்.சி. ரோடு(ஸ்டான்லி மருத்துவமனை) ஸ்டான்லி நகர், ரிசர்வ் வங்கி, கெங்குரெட்டி, பெரம்பூர் ஹைரோடு, வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், ஜோன்ஸ் ரோடு, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி, ரங்கராஜபுரம், […]

Loading

செய்திகள்

பேரிடரிலும் விளம்பரத்துக்கு ஏங்கும் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, அக். 15– தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் […]

Loading

செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

விருதுநகர், அக். 15– விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார், திடீரென நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் உயிர்தப்பினர். திருப்பூர் அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 47). இவர் தனது உறவினர் மகன் மனோஜ் என்பவரை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்த்துவிட்டு உறவினருடன் திருப்பூருக்கு நேற்று மாலை தனது காரில் புறப்பட்டார். தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே […]

Loading