செய்திகள் நாடும் நடப்பும்

ஜனத்தொகை பெருக்கமும் வாழ்வியல் சிக்கல்களும்!

ஆர் முத்துக்குமார் 2021ல் நடைபெறவேண்டிய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக நடக்காமல் போனது. இதனால் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பே தற்போதைய அனைத்து புள்ளிவிவரங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) செப்டம்பர் 24, 2023 அன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் 2024ல் இந்தியாவின் மக்கள் தொகை 138-142 கோடி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் தென்மாநிலங்களின் மக்கள் தொகை பங்களிப்பு 14%லிருந்து 12% ஆகக் குறையும் வடமாநிலங்களின் பங்களிப்பு 27%லிருந்து 29% ஆக […]

Loading

செய்திகள்

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர், அக். 23– வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் டி.ஐ.ஜி. உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டு வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர் வீட்டில் இருந்த […]

Loading

செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பரபரப்பான வேளச்சேரி ரெயில் நிலையம்

சென்னை, அக். 23– சென்னை வேளச்சேரி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொலைபேசி அழைப்புகள், இ–மெயில்கள் மூலமாக வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் அழைப்புகள் வருவது சாதாரணமாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி ரயில் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு: பவுன் ரூ.58,720 க்கு விற்பனை

சென்னை, அக். 23– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.58,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அண்மை காலமாக தங்கம் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.58,72 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,340 க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.112 க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த […]

Loading

செய்திகள்

தீபாவளி: உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

சென்னை, அக்.23– தீபாவளி பண்டிகையையொட்டி, உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சந்தைக்கு தியாகதுருவம், திருக்கோவிலூர் ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை களைகட்டியது. காலை […]

Loading

செய்திகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க இன்றும் தடை

தென்காசி, அக். 23– மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் 2 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி […]

Loading

செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல்: 45 வேட்பாளர்களை அறிவித்த சிவசேனா

மும்பை, அக். 23– மகாராஷ்டிராவில் 45 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட பட்டியலை சிவசேனா வெளியிட்டு உள்ளது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி–பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார். 288 சட்டமன்ற தொகுதிகளை மகாராஷ்டிராவில் நவம்பர் 20ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் மகாயுதி கூட்டணியில், பா.ஜ.க.–சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் முதல் கட்டமாக 45 பேர் கொண்ட […]

Loading

செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் டாணா புயலாக வலுப்பெற்றது

தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை சென்னை, அக். 23– வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு […]

Loading

செய்திகள்

வங்கதேச அதிபர் பதவி விலக கோரி மீண்டும் மாணவர்கள் போராட்டம்

டாக்கா, அக். 23– வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், தற்போது புதிய அதிபருக்கு எதிராகவும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகலில் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலக வேண்டும் உள்பட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Loading

செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலாவுக்கு பில்கேட்ஸ் ஆதரவு

50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார் வாஷிங்டன், அக். 23– அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு தொழிலதிபர் பில்கேட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கமலாவுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, அதிக செல்வாக்கு […]

Loading