செய்திகள்

கோயில் உண்டியலை உடைத்து ரூ.15,000 கொள்ளை: பக்தர்கள் அதிர்ச்சி

திருத்தணி, அக். 20– கே.ஜி.கண்டிகை நகரில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயில் உண்டியலை உடைத்து, ரூ.15,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அறிந்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை நகரில் சுமார் 40 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிறீகற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு யாரும் இல்லாத நேரம் பார்த்து புகுந்த மர்ம நபர்கள், கோயில் முன் பீடத்தில் இருந்த உண்டியலை உடைத்து 15,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்களுக்கு வலை […]

Loading

செய்திகள்

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும்

தெலுங்கானாவில் ராகுல் காந்தி வாக்குறுதி ஐதராபாத், அக். 20– தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக ஐதராபாத் வந்தார். நேற்று 2-வது நாளாக பெத்தப்பல்லி மாவட்டத்தில் பேருந்து தேர்தல் பயணம் சென்ற அவர், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுமக்கள் முன்னிலையில் பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தி, “நான் பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறேன். அதனால் என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.எ னது உறுப்பினர் பதவியை […]

Loading

செய்திகள்

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஸ்டாலின், எடப்பாடி, ஓ.பி.எஸ். இரங்கல்

சென்னை, அக்.20- மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கி […]

Loading

செய்திகள்

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்: தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்வு

சென்னை, அக். 20– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதற்கு இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் தொடர்வதே முதன்மைக் காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு நாட்களில் ரூ, 1,160 தங்கம் உயர்ந்திருந்தது. ரூ.600 உயர்வு இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

டெல்லி, அக். 20– இந்தியாவில் புதிதாக 36 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 48 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,99,764 […]

Loading

செய்திகள்

இணையத்தில் வெளியானது விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

படத்தை காண சுவர் ஏறி குதித்த ரசிகரின் கால் முறிவு சென்னை, அக். 19– விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியானது. முதல்நாளே இணையத்தளத்தில் படம் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், […]

Loading

செய்திகள்

215 கி.மீ. வேகத்தில் காரில் பயணம்: ரோகித் சர்மாவுக்கு அபராதம்

புனே, அக். 19– 215 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா கடந்த 14-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இரண்டு […]

Loading

செய்திகள்

27 ந்தேதி மருதுபாண்டியர்கள் குரு பூஜை: 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவு சிவகங்கை, அக். 19– மருதுபாண்டியர்கள் குருபூஜையை முன்னிட்டு 9 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை பகுதியை ஆண்ட அரசி வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக இருந்து, சிவகங்கை மண்ணை ஆண்டவர்கள் மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள். 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர். 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் […]

Loading

செய்திகள்

இன்னும் 5 நாட்களில் மீண்டும் இணைய சேவை: மணிப்பூர் முதல்வர் உறுதி

இம்பால், அக்.19– மணிப்பூரில் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர், நாகாக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள உக்ரூல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பிரேன் சிங், “இணைய சேவை இல்லாமல் மக்கள் சந்தித்துவரும் அவதியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சில சக்திகள் சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவதால் இணைய சேவையைத் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் […]

Loading

செய்திகள்

13-வது நாளாக நீடிக்கும் போர் இஸ்ரேல் வந்தார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

ஜெருசலேம் அக். 19– பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் வந்தடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். ஹமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை 13-வது நாளாக இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் […]

Loading