செய்திகள்

பட்டதாரி என்பதால் வேலைக்கு செல்ல யாரையும் கட்டாயப்படுத்த முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி, அக். 26– விவாகரத்து பெற்ற பட்டதாரி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு கணவர் கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தம்பதிகள் அண்மையில் விவாகரத்து பெற்றனர். அந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. விவாகரத்து பெற்றதால், மனைவிக்கு ஜீவனாம்சமாக கணவர் மாதந்தோறும் ரூ.25,000 வழங்க குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜீவனாம்சத்தை ரூ.15,000-ஆக குறைக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மனைவி பி.எஸ்சி […]

Loading

செய்திகள்

பள்ளி பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ பெயர் ‘பாரத்’ என மாறுகிறது

என்.சி.இ.ஆர்.டி. உயர் மட்டகுழு பரிந்துரை சென்னை, அக்.26- ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்று பள்ளி பாடப்புத்தகங்களில் மாற்றுவதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அமைத்த உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. ‘இந்தியா’ என்ற பெயரை பாரத் என மாற்றுவது என்ற கருத்து கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜி–20 அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதிக்கு பதிலாக பாரதத்தின் ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டது. அதேபோல், டெல்லியில் நடந்த ஜி–20 உச்சிமாநாட்டில் பிரதமர் […]

Loading

செய்திகள்

கனடா விசா சேவை மீண்டும் இன்று துவக்கம்

டெல்லி, அக். 26– கனடா விசா சேவை, இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம் சாட்டியது. இதையடுத்து, இந்தியா-கனடா இடையே நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய தூதர்கள் வெளியேற கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் தொடக்கம் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 26– இந்தியாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 249 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 51 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,150 […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பள்ளிக் கல்வியிலேயே விண்வெளிப் பாடங்கள் அவசியம்!

ஆர். முத்துக்குமார் ஒன்பது நாள் நவராத்திரி திருநாட்கள் முடிவில் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சிறப்புற நடைபெற்றதை கண்டோம். பத்தாம் நாளில் விஜயதசமியாய் கொண்டாடுவது வழக்கம். விஜய தசமி நாளில் வித்யாரம்பம் விசேஷமானது! சிறுவர் பள்ளிக் கூடங்களில் கல்விப் பெறுவதை தொடங்குவது வாடிக்கை. இம்முறையும் பல பள்ளிகளில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்தில் உடன் அமர்ந்து அரிசியில் எழுதுவது, தொடக்கமாய் ‘அ’ எழுதி, பள்ளிக் கல்விக்கு தொடக்கப் புள்ளி வைத்தனர். இன்றைய நவீன விஞ்ஞான காலக்கட்டத்தில் இந்த […]

Loading

செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, அக்.25-– போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கே.பனீந்திர ரெட்டிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக 2020-–ம் ஆண்டு போனஸ் குறைக்கப்பட்டது. 2021–-ம் ஆண்டும் அதே போனஸ் வழங்கப்பட்டது. அரசு மற்றும் […]

Loading

செய்திகள்

பத்திரப்பதிவு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்வு: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு

சென்னை, அக். 25– வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்தப்படுவதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடும் எதிர்ப்பு உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு […]

Loading

செய்திகள்

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் கையெழுத்திட வேண்டும்

அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல் சென்னை, அக். 25– கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் தி.மு.க. அரசுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மருது சகோதரர்கள் நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர்களை தமிழக அரசு மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து முதல்வர் […]

Loading

செய்திகள்

கேரளாவில் தொடர் கனமழை: 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

திருவனந்தபுரம், அக். 25– கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு என 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மலையோர பகுதி மற்றும் அரபிக் கடலோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தபட்டனர். நிலச்சரிவு இடுக்கி நெடுங்கண்டம் அருகே பச்சடி பகுதியில் ஏற்பட்ட […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 25– இந்தியாவில் புதிதாக 51 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 259 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 12 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,126 […]

Loading