செய்திகள்

இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்கள், மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டும்

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன.13-– இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர் களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் […]

Loading

செய்திகள்

விஜய் போபியாவால் அவதிப்படும் சீமான்; தொண்டர்களை வழிநடத்த தகுதி இல்லாதவர்

சுப. உதயக்குமார் கடும் கண்டனம் சென்னை, ஜன. 13– நடிகர் விஜய் போபியாவால் பாதிக்கப்பட்டுள்ள சீமான், தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் என்று பச்சைத் தமிழகம் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து சீமானின் பேச்சுக்களைக் கண்டித்துள்ள சுப. உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “அரசியல் என்பது முன்னோக்கிச் செல்லும் ஓர் இலட்சியப் பயணம். முன்னாளில் வழிநடத்திய தலைவர்களிடமிருந்து இந்நாளில் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை, ஜன. 13– தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.58,720 ஆக விற்பனையாகி வருகிறது. சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்வு அந்த அடிப்படையில் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.25 ஆகவும், 22 கேரட் தங்கம் விலை ஒரு சவரனுக்கு […]

Loading

செய்திகள்

பழவேற்காட்டு கடற்கரையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

பொன்னேரி ஜன-13– திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் விழா நாட்களில் கடற்கரையில் அதிகமாக கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திலும் இரண்டு பேர் இறந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் […]

Loading

செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை மசோதா: மத்திய அரசின் கருத்துடன் தேர்தல் கமிஷன் முரண்பாடு

புதுடெல்லி, ஜன.13-– ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறை மசோதா விவகாரத்தில், மத்திய அரசின் கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை சொல்லி வருகிறது. அவை வருமாறு:- அடிக்கடி தேர்தல் […]

Loading

செய்திகள்

மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேர் பிரிட்டிஷ் கடற்படையால் கைது

கன்னியாகுமரி, ஜன. 13– தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் தற்பொழுது பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பத்து மீனவர்கள் பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு இந்திய அமைச்சகம் சார்பில் தகவல் […]

Loading

செய்திகள்

சென்னையில் போகிப் பண்டிகை கொண்டாட்டம்: புகை மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு

சென்னை, ஜன. 13– சென்னையில் போகிப் பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்றார் போல் சென்னையில் போகிப்பண்டிகையை இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. பழைய பொருட்களை தீயில் இட்டு கொளுத்தி மக்கள் போகிப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதால் கடுமையான மாசு ஏற்படுவது வழக்கம். மாசுபாடு புதிய உச்சத்தை அடையும். தமிழ்நாடு முழுக்க இன்று பழைய பொருட்ளை எரித்து […]

Loading

செய்திகள்

பாரதத்தை தேசமாக ஏற்றுக்கொள்ளாத முதல்வரின் ஆணவம் நல்லதல்ல: கவர்னர் மாளிகை அறிக்கை

சென்னை, ஜன.13-– சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அதே நேரம் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் படிக்காமல் சென்றாலும், அவை விதிகளின்படி அவைக்குறிப்பில் அது […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து மதுரை வழியாக இன்று இரவு மேலும் ஒரு சிறப்பு ரயில்

சென்னை, ஜன. 15– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று (13-ந் தேதி) இரவு 11.45 மணிக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, மத்திய திருவனந்தபுரம், வழியாக […]

Loading

செய்திகள்

8 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்m ஜன. 12– எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகவே நடந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும் என்பதைத் தமிழக அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தினாலும் கூட […]

Loading