செய்திகள்

முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி மரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கொல்லம், நவ.24–- தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமாபீவி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். 1997-–ம் ஆண்டு ஜனவரி 25–-ந் தேதி முதல் 2001–-ம் ஆண்டு ஜூலை 3-–ந் தேதி வரை தமிழக கவர்னராக பதவி வகித்தவர் பாத்திமா பீவி. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்த இவர், தனது சொந்த ஊரிலேயே வசித்து வந்தார். 96 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக கொல்லத்தில் உள்ள தனியார் […]

Loading

செய்திகள்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் நாளை இயங்காது

சென்னை, நவ. 24– தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் நாளை (25–ந்தேதி) இயங்காது. தீபாவளி பண்டிகையையொட்டி, விடுமுறையின்றி கடைகள் இயங்கியதால், நியாய விலைக் கடைகளுக்கு நாளை மாற்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொடா்ச்சியாக விடுமுறையின்றி நியாய விலைக் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த 13ம் தேதி நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதேபோன்று நாளையும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]

Loading

செய்திகள்

டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடல்

புதுடெல்லி, நவ. 24– டெல்லியில் ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் உடனான தூதரக உறவை துண்டித்துள்ளன. மேலும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தையும் மூடியுள்ளன. ஆனால் இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகளையும் இந்தியா வழங்கி வந்தது. இந்நிலையில் டெல்லியில் செயல்பட்டு வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

டிசம்பர் 1-ந்தேதி முதல் புதிய நடைமுறை அறிமுகம்

அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத்தீர்வை குறைப்பு சென்னை, நவ.24–- அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை குறைக்கப் பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு வரும்போது, இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது […]

Loading

செய்திகள்

‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு, நவ.24-– ‘டெட்ரா பேக்’ மது விற்பனை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். ஈரோட்டுக்கு நேற்று வந்த முத்தமிழ்த்தேருக்கு வரவேற்பு அளித்த தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தேரில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தீபாவளி போன்ற பண்டிகை யின்போது அனைத்து பொருட்களின் விற்பனையும் அதிகமாக காணப்படும். அதற்காக திட்டமிட்டு மது விற்பனை நடத்தப்படவில்லை. மது விற்பனையை தடுப்பதும் கடினம். மகிழ்ச்சிக்காக பலர் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், நவ. 24– அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 26 வயதான இந்திய மருத்துவ மாணவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் பயின்ற சின்சினாட்டி மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆதித்யா அத்லக்கா (26) அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இச்சம்பவம் குறித்து சின்சினாட்டி நகர போலீசார் கூறியதாவது:– கடந்த 9ம் தேதி காருக்குள் ஒரு நபர் சுடப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு […]

Loading

செய்திகள்

நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டார் மன்சூர் அலிகான்

சென்னை,நவ. 24– நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சுக்கு நடிகை திரிஷா ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து […]

Loading

செய்திகள்

‘உங்களை தேடி உங்கள் ஊரில்…’ என்ற புதிய திட்டம் அடுத்த மாதம் துவக்கம்

ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை கேட்க கிராமங்களில் கலெக்டர்கள் தங்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை, நவ.24–- ‘உங்களை தேடி உங்கள் ஊரில்…’ என்ற புதிய திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் குறை கேட்க கிராமங்களில் கலெக்டர்கள் தங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாக சென்று அடைகின்றதா? பல்வேறு துறைகளால் […]

Loading

செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி

சென்னை, நவ. 24– சென்னை ராயபுரத்தில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று 28 பேரை கடித்து குதறியது. இதையடுத்து அந்த நாய் கல்லால் அடித்து கொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்த நாய்க்கு செய்யப்பட்ட உடற்கூராய்வில் ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து நாய் கடித்து சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள நடவடிக்கை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

சென்னை, நவ.24– தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20க்கு […]

Loading