செய்திகள்

மேலும் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்: ஊழியர்கள் கலக்கம்

வாஷிங்டன், ஜன.5– அமேசான் நிறுவனம் மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்த ஆண்டில் பணியிலிருந்து நீக்கம் செய்தனர். இவர்கள் வரிசையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது அமேசான் நிறுவனம். இந்நிலையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு […]

Loading

செய்திகள்

டெல்லியில் இன்று முதல் 7 ந்தேதி வரை நடைபெறும் தலைமைச் செயலாளர்கள் மாநாடு

பிரதமர் மோடி நாளை பங்கேற்பு டெல்லி, ஜன. 5– டெல்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கவுள்ளார். மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய அளவில் தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் பஞ்சாபில் முதல் மாநாடு நடத்தப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது மாநாடு டெல்லியில் இன்று முதல் ஜனவரி 7 வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், ஒன்றிய அரசு அதிகாரிகள், மாநிலங்களின் […]

Loading

செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை, டிச. 5- தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். எனவே அந்த பதவியானது ஒரு ஆதாயம் தரக்கூடிய பதவி. அரசியல் சாசனப்படி கவர்னராக பதவி […]

Loading

செய்திகள்

தனியார் வங்கிகளின் நிகர லாபம் 3–வது காலாண்டில் 25 சதம் உயர்வு

டெல்லி, ஜன. 5– நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனியார் வங்கிகளின் நிகர லாபம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். கொரோனா பேரிடரிலிருந்து தொழில் துறைகள் மீண்டதால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடன் தேவைகள் பன்மடங்கு அதிகரித்தன. வீடு, வாகனங்கள், தனிநபர் கடன்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தனியார் துறை வங்கிகள், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் விநியோக சந்தையை விரிவுபடுத்தின. லாபம் […]

Loading

செய்திகள்

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜன.5– சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரும், துணை ஆணையாளருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (5–ந் தேதி) ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்தச் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் பெயர்கள் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2022 முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் எண்ணிக்கை 32,579. வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,70,125 வாக்காளர்களும், […]

Loading

செய்திகள்

கோவா காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமனம்

டெல்லி, ஜன. 5– கோவா மற்றும் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார். தொடர்ந்து, மேலும் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. […]

Loading

செய்திகள்

சென்னையில் மீண்டும் பரவும் மெட்ராஸ்-ஐ’: தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சென்னை, ஜன. 5– சென்னையில் மீண்டும் மெட்ராஸ்-ஐ பரவத் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண் நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் இந்த நோய் பரவியது. அதன் பிறகு குறைந்தது. இந்த நிலையில் இப்போது மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. தினமும் நூற்றுக்கும் […]

Loading

செய்திகள்

சரக்கு வாகனங்கள் மோதல்: கரூர் அருகே 2 பேர் பலி

கரூர், ஜன. 5– கரூர் மாவட்டம் மாயனூர் அருகே இன்று காலை டாட்டா ஏஸ் லோடு வாகனம் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் சரவணன் மற்றும் மாரியப்பன். இவர்கள் இருவரும் மாடு வாங்குவதற்காக டாட்டா ஏஸ் லோடு வாகனத்தில், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 2 பேர் பரிதாப பலி அப்போது கேரளாவில் இருந்து […]

Loading

செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள்:மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜன.5– மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எப்போதும் நல்ல உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக பொங்கலுக்கு 17 ஆயிரம் சிறப்பு பஸ்கள்

அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு சென்னை, ஜன.4-– பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக 16 ஆயிரத்து 932 பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை வருகிற 15–-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர் திருநாளை கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த […]

Loading