புதுடெல்லி, ஏப்.2–
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 3,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
கடந்த 30-ந்தேதி பாதிப்பு 3,016 ஆக இருந்தது. மறுநாள் 3,094 ஆக உயர்ந்தது. நேற்று 2,995 ஆக குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 3,947 ஆக இருந்தது. அதன் பிறகு 6 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பு நேற்று உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 884 பேர், மகாராஷ்டிராவில் 669, ,டெல்லியில் 416 , குஜராத்தில் 372, இமாச்சலத்தில் 354, கர்நாடகாவில் 247, அரியானாவில் 142, உத்தரபிரதேசத்தில் 113, கோவாவில் 117, தமிழகத்தில் 156 பேரும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்வர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 22 ஆயிரத்து 605 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்த நேற்று 1,784 பேர் உள்பட மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 335 பேர் மீண்டுள்ளனர்.
தொற்று பாதிப்பு காரணமாக நேற்று டெல்லி, அரியானா, கேரளா, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
மொத்த பலி எணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த எண்ணிக்கை நேற்றை விட 2,035 அதிகரித்து உள்ளது.
இன்று காலை நிலவரப்படி 18,389 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,953, மகாராஷ்டிராவில் 3,324, குஜராத்தில் 2,294 பேர், டெல்லியில் 1,216 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.