செய்திகள்

48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகிறது

Makkal Kural Official

நெல்லைக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை, டிச. 13–

48 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நேற்று மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில்‌ நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்‌, மேற்கு திசையில்‌ நகர்ந்து, படிப்படியாக வலுவிழக்கக்‌ கூடும்‌. நாளை தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி நிலவக்கூடும்‌. இதன்‌ காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும்‌. இது மேற்கு–வடமேற்கு திசையில்‌ தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்‌ கூடும்‌.

இன்று தென்தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

திருநெல்வேலி மாவட்டத்‌தில்‌ ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, (ரெட் அலர்ட்) ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌,

காரைக்கால்‌ பகுதிகளில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, மதுரை, விருதுநகர்‌, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

16–ந்தேதி ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17–ந்தேதி கடலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌, காரைக்கால்‌ பகுதிகளில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்‌சி, புதுக்கோட்டை, திருச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌, புதுவை பகுதிகளில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

18–ந்தேதி கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, விழுப்புரம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்‌சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ கனமழையும்‌ பெய்ய

வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய, லேசான – மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *