செய்திகள் வாழ்வியல்

4 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் செல்லும் கார் : சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனைக் கண்டுபிடிப்பு

சென்னை, ஆக.27 – ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீறிட்டுப் பாய்ந்து சென்று

நான்கே (4) வினாடிகளில் 100 கிலோ மீட்டர்

சென்றடையும் இந்தியாவின் முதல் பந்தயக்காரை கண்டுபிடித்து சென்னை ஐஐடி

மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த அதிவேகக்கரை தயாரித்து ஓட்டிக்காட்டி கண்டோரைக்கதிகலங்க அடித்தனர் சென்னை ஐஐடி

மாணவர்கள் .

45 பேர்களைக் கொண்ட சென்னை ஐஐடி பொறியியல் துறைகளின் மாணவர்கள் தங்களது அனைத்து தொழில் நுட்ப அறிவையும் ஒன்று திரட்டி இந்த அசுர வேகக்காரை கண்டுபிடித்துள்ளனர்.வழக்கமான எரிபொருள் பயன்படுத்தும் வகையில் முதலில் இக்காரை உருவாக்கினார்கள். பின்னர் கால மாற்றத்திற்கு ஏற்ப மின்சாரத்தால் இயங்கும் காராக மாற்றினார்கள்.

இந்தக்கார் ஒரு வினாடிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் வீறிட்டுப் பாய்ந்து சென்று நான்கே (4) வினாடிகளில் 100 கிலோ மீட்டர் சென்றடையும். இது இந்தியாவின் முதல் பந்தயக்காராக இருக்கும் என்று சென்னை ஐஐடி

மாணவர்கள் பெருமிதத்துடன் கூறினார்கள். .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *