செய்திகள்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க ஒரு வாரத்துக்குள் டெண்டர்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

Makkal Kural Official

சென்னை, பிப்.24–

மின்இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்து வதற்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய ஒரு வாரத்துக்குள் டெண்டர் விடப்பட உள்ளது.

வீடுகள் உள்ளிட்ட மின்இணைப்புகளில் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின்இழப்பை தடுக்கவும், மின்கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீ்ட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என காலக்கெடு நிர்ண யித்துள்ளது. அதற்குள் இத்திட்டத்தை நிறை வேற்றினால், மத்திய அரசு தரும் நிதியுதவி மானியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, மீண்டும் செலுத்தத் தேவையில்லை. இல்லையெனில், அது கடனாக மாற்றப்பட்டு மீண்டும் திருப்பி செலுத்த வேண்டும்.

அதன்படி, தமிழக மின்வாரியம் ஸ்மார்ட் மீ்ட்டர்களை பொருத்த முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2023-ம் ஆண்டு, வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி, 4 தொகுப்பு களாக பிரித்து 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடுக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 8 மாவட்டங்களில் மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.

இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் பங்கேற்று குறைந்த விலையை குறிப்பிட்டது. எனினும், மின்வாரியம் நிர்ணயித்த தொகையை விட இது அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதை யடுத்து, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் விரைவில் விடப்படும் என மின்வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், அண்மையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் 128-வது வாரிய கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக புதிய டெண்டர்விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடும் பணி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *