தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை, டிச.24–
இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
-ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை சென்னை -– திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை சென்னை –- செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 12-ந்தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை செங்கோட்டை -– தாம்பரம் வரும் அதிவிரைவு ரெயிலும், ஜனவரி 2-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந்தேதி வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை காரைக்காலில் இருந்து வரும் தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறாக மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.